தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான வங்கிப்பற்று அட்டைகளை இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ஆட்சியர் கி.சாந்தி, செந்தில்குமார் எம்.பி., முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, சி.பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.