districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வாகனத்தின் அசல் பதிவுச் சான்றிதழை தர மறுப்பு நாமக்கல்,

பிப்.12- இருசக்கர வாகனத்தின் அசல்  வாகனப் பதிவு சான்றிதழை வழங் காத விற்பனையாளர், பாதிக்கப் பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.50  ஆயிரம் இழப்பீடு வழங்க வேண் டும் என நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம், ராசி புரத்தைச் சேர்ந்த சந்திரன் என்வ ரின் மனைவி மாதேஸ்வரி (53).  இவர் இருசக்கர வாகனம் வாங்கு வதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஈரோட்டிலுள்ள லோட்டஸ் ஏஜென்சி என்ற இரு சக்கர விற்பனை நிலையத்தை அணுகியுள்ளார். ரூ.63,509 மதிப் புள்ள வாகனத்தை தேர்வு செய்து,  ரூ.10 ஆயிரத்தை விற்பனையாளரி டம் முன்பணமாக செலுத்தியுள் ளார். ஈரோட்டிலுள்ள எச்டிஎப்சி வங்கி மூலமாக வாகனத்தின் மீதம்  தொகைக்கு இருசக்கர விற்பனை யாளர் கடன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருசக்கர வாகனத்தை பதிவு  செய்த பின்னர் அசல் பதிவுச் சான்றி தழை மாதேஸ்வரி கேட்டபோது, கடனுக்காக அசல் பதிவுச் சான்றி தழை வங்கியில் கொடுத்து விடு வோம் என்று இருசக்கர வாகன விற் பனையாளர் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அசல் கடனையும், வட்டியையும் செலுத்திய பின்னர்,  வங்கிக்கு சென்று அசல் வாகன  பதிவுச் சான்றிதழை கேட்டபோது,  தங்களிடம் சான்றிதழ் இல்லை  என்று வங்கி தரப்பில் மாதேஸ்வ ரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் வழக்கறிஞர் மூலம் சட்ட அறிவிப்பு அனுப்பி, பதிவுச் சான்றிதழை தருமாறு வங்கியில் கேட்டபோதும், அசல் சான்றிதழ் தங்களிடம் இல்லை எனக்கூறி வங்கி நிர்வாகம் கூறியதோடு, அசல் பதிவுச் சான்றிதழில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட கடன் குறிப்பு நீக்குவதற்கான படிவத்தை மட்டும்  வழங்கியுள்ளது. இதனால் வாகன விற்பனையாளரை அணுகி அசல்  பதிவுச் சான்றிதழை கேட்டபோது தாங்கள் வங்கியில் கொடுத்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள் ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஸ்வரி கடந்தாண்டு மே மாதம், நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் வங்கியின் மீதும், வாகன விற்பனையாளர் மீதும் வழக்கு தாக்கல் செய்தார்.  இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற  நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினர்கள்  ஆர்.ரமோலா, என்.லட்சுமணன் ஆகியோர் புதனன்று தீர்ப்பு வழங் கினர். அதில், அசல் வாகன பதிவுச்  சான்றிதழ் யாரிடம் வழங்கப்பட் டது என்பதற்கான அறிக்கையை விசாரணையில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் சமர்ப்பித்துள் ளார். இதில் அசல் பதிவுச் சான்றி தழை பெற்றுக் கொண்டதாக வாகன விற்பனையாளரின் தரப் பில் கையொப்பம் செய்யப்பட்டுள் ளது. இதன் மூலம் அசல் பதிவுச் சான்றிதழை வைத்துக்கொண்டு, அதனை தர மறுக்கும் வாகன  விற்பனையாளரின் செயல் நேர்மை யற்ற வர்த்தக நடைமுறை. எனவே,  நான்கு வார காலத்துக்குள் அசல் வாகன பதிவுச் சான்றிதழை வழக்கு  தாக்கல் செய்துள்ள மாதேஸ் வரிக்கு, இருசக்கர வாகன விற் பனையாளர் வழங்க வேண்டும். மாதேஸ்வரிக்கு ஏற்பட்ட மன  உலைச்சல் மற்றும் சிரமங்க ளுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம்  வழங்க வேண்டும், என தெரிவிக்கப் பட்டது. மேலும், எவ்வித தவறும்  இல்லாததால் வங்கியின் மீதான  புகார் தள்ளுபடி செய்யப்பட்டுள் ளது.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை குறித்து இன்று பேச்சுவார்த்தை ஈரோடு,

பிப். 11- ஈரோடு மாநாகராட்சி தூய்மைப்  பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து ஒத்திவைக்கப்பட்ட பேச்சு வார்த்தை (இன்று)வியாழனன்று  நடைபெறுகிறது. ஈரோடு மாநகராட்சியில் கணிச மான நிரந்தரப்படுத்தப்படாத தூய் மைப் பணியாளர்களும், குறைவான நிரந்தரப்படுத்தப்பட்ட தூய்மைப் பணி யாளர்களும், பணியாற்றி வருகின்ற னர். அதேபோல பல்வேறு பிரிவுகளில்  ஊழியர்கள் உள்ளனர். இத்தொழிலா ளர்களுக்கு பணி நிரந்தர சட்டப்படி 2  ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித் திருந்தால் பணி நிரந்தரம் வழங்கப்பட வேண்டும். 17 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் இவர்களுக்குப் பணி நிரந் தரம் வழங்கப்படவில்லை.  இவர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்து அரசாணைப்படி ஊதியம்,  பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கை களுக்காக பல்வேறு கட்ட போராட்டங் களை முன்னெடுத்து வருகிறது.  இந்நிலையில் தனியார் மயத்தைக் கைவிட வேண்டும். அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந் தரம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு  சார்பில் கடந்த 26 ஆம் தேதியன்று  வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் தொழிலாளர் துறை தலையிட்டு பேச்சுவார்த்தை நடத் தியது. 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடை பெற்ற நிலையில், சில கோரிக்கை களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உடன் பாடு தெரிவித்தது. எனினும் ஒப்பந்தம்  ஏற்படவில்லை. இதற்கிடையில் ஈரோடு  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர் தல் நடைபெற்றதால் பேச்சுவார்த்தை  ஒத்தி வைக்கப்பட்டது.  இதற்கிடையில் வியாழனன்று மீண் டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் நிர்வாகம் என்ன செய் யப் போகிறது என்பதைப்பொருத்து, அடுத்த கட்ட நகர்விற்கு சிஐடியு முடி வெடுக்க உள்ளது.

தேசிய அளவிலான கருத்தரங்கம் தருமபுரி

, பிப்.12- தருமபுரி பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில்,  இயற்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங் கம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பைசுஅள்ளியில் உள்ள பெரியார் பல் கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில்,  இயற்பியல் துறை சார்பில், தேசிய அளவிலான கருத்த ரங்கம் புதனன்று நடைபெற்றது. முனைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் செல்வா பாண்டியன் வரவேற்றார். இந்திய நிறமாலை இயற்பியல் சங்கத்துடன் இணைந்து, ‘மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்’ என்ற தலைப்பில் நடை பெற்ற கருத்தரங்கில், முனைவர்கள் குணசேகரன், வெங்கட் ராம ரெட்டி ஆகியோர் உரையாற்றினார். இதில் முனை வர்கள் பிரசாத், கோபாலகிருஷ்ணன், செந்தில் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

 

பழங்குடி கிராமங்களுக்கு உதவ நிதி திரட்டும் வகையில், கைவினைப் பொருட்கள் கண்காட்சிகோவை,

பிப்.12- கோவையில் பழங்குடி கிராமங்களுக்கு உதவ நிதி திரட்டும் வகையில், ‘பிக்கி மகளிர்  அமைப்பு’ சார்பில், ஆடம்பர மற்றும் வாழ்க்கை முறை என்ற தலைப்பில் ஆடை,  அணிகலன்கள், கைவினைப் பொருட்கள்  கண்காட்சி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் சுமார் 13 ஆயிரம் உறுப் பினர்களுடன் செயல்பட்டு வரும் பிக்கி மக ளிர் அமைப்பு, மகளிர் மேம்பாட்டிற்கான பணி களை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த  அமைப்பின் கோவை அத்தியாயம் சார்பில், ஆனைக்கட்டி பழங்குடி கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள தனி யார் நிறுவன பங்களிப்போடு, ஆடம்பர மற் றும் வாழ்க்கை முறை கண்காட்சியை புத னன்று துவங்கினர். கோவை - அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்ஸி ஹோட்டலில்  துவங்கிய இந்த கண்காட்சி வரும் 2 நாட்க ளுக்கு நடைபெற உள்ளது. இக்கண்காட்சி யில் விலை உயர்ந்த ஆடை, அணிகலன்கள்,  கைவினைப் பொருட்கள், பிரத்யோக  கைவினை தயாரிப்பு மற்றும் வடிவமைப் பாளர்களின் ஸ்டால்களும் அமைக்கப்பட் டுள்ளது. 5 ஆவது ஆண்டாக நடைபெற்று  வரும் இந்த கண்காட்சி மூலம் பெறப்ப டும் வருவாய் முழுமையாக கோவை,  ஆனைக்கட்டி பழங்குடி கிராம மக்களுக்கு  தேவையான பணிகளை மேற்கொள்ள உள்ள தாகவும், பழங்குடி பெண்கள் சுய தொழில்  முன்னேற்றத்திற்கான பயிற்சிகளை வழங்க  உள்ளதாக, அவ்வமைப்பினர் தெரிவித்துள் ளனர்.

நிலுவைத் தொகை கேட்டு  பேராசிரியர்கள் போராட்டம்பொள்ளாச்சி

, பிப்.12- அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரி யர்கள், பணி மேம்பாடு தொடர்பான அர சாணை எண்:5யை முழுவதுமாக அமல்ப டுத்தி, நிலுவைத் தொகையை வழங்க வேண் டும், என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட னர். அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர், பணி மேம்பாடு  தொடர்பான அரசாணை எண்:5யை முழுவது மாக அமல்படுத்தி, அரசு உதவி பெறும்  கல்லூரி ஆசிரியர்களுக்கு மேம்படுத்தப் பட்ட ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை  வழங்க வேண்டும். எம்பில், பிஎச்டி ஊக்க  ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க  வேண்டும். புத்தொளி, புத்தாக்க பயிற்சிக் கான கால நீட்டிப்பு வழங்க வேண்டும், உள் ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி புதனன்று மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்ட னர். அதன் ஒரு பகுதியாக ஏயூடி, மூட்டா ஆகிய அரசு உதவி பெறும் கல்லூரி பேராசி ரியர்கள் அமைப்புகள் சார்பில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி - பாலக்காடு சாலை யில் உள்ள என்ஜிஎம் கல்லூரி முன்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு என்ஜிஎம் கல்லூரி ஏயூடி கிளைத் தலைவர் என்.அன்பரசு தலைமை வகித்தார். பொள்ளாச்சி கிளைச் செயலாளர் என்.சிவசங் கர், பொருளாளர் சுஜா மேத்திவ், துணைத் தலைவர் முத்துக்குமாரவேல், இணைச்செய லாளர் எஸ்.சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.