districts

img

கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

அவிநாசி, ஜன.12- கருவலூரில் நடைபெற்ற கால் பந்து போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஞாயிறன்று பரிசுகளை வழங்கினார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கருவலூரில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலி னின் பிறந்தநாளை முன்னிட்டு, இரண்டு நாட்கள் கால்பந்து விளை யாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 4011 என்ற பெயர் கொண்ட அணி முதலிடமும், அன்னூரைச் சேர்ந்த பலேலூப் அணி இரண் டாம் இடமும், கருவலூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி மூன்றாம் இடமும், அன் னூர் த்ரிஷா நான்காம் இடமும்,  அதேபோல 17 வயது பெண்கள்  அணியில் கருவலூர் ஸ்போர்ட்ஸ்  அகாடமி முதலிடமும், உப்பி லிபாளையம் செல்லாண்டியம்மன் பள்ளி இரண்டாம் இடமும் பிடித் தன. இந்நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற பரிசு வழங்கும் விழா விற்கு, திமுக ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் தங்கராஜ், முன் னாள் ஒன்றியக் கவுன்சிலர் சீனிவா சன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வர்கள் அவிநாசியப்பன், வரதரா ஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித் தனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசு மற்றும் கோப்பை யினை வழங்கினார். அப்போது அமைச்சர் பேசுகை யில், தமிழக அரசு விளையாட்டு வீரர் களை ஊக்குவித்து வருகிறது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் போன்ற எண் ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இதனால் நாடாளு மன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச் சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள் ளது. அதேபோல வருகின்ற சட்ட மன்றத் தேர்தலிலும் 234 தொகுதி களிலும் திமுக கூட்டணியினை வெற்றியடைய செய்ய வேண்டும், என்றார். இதில் இளைஞரணி துணை  அமைப்பாளர் கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.