மீன் வளர்ச்சி கழகத்தின் தனியார்மய விசுவாசம்
ஈரோடு, ஆக.22- ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை யில் பவானிசாகர் மற்றும் சிறுமுகை பகுதி யில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி உரிமையை நம்பி உள்ளனர். மீன் வளத்துறை அலுவலர்களின் சட்டவிரோத நடவடிக்கையை கண்டித்து, தொடர் போராட்டங்களை மீனவ கூட்டுறவு சங்கங் கள் இனைந்து நடத்தியது. மேலும், நீதிம ன்றத்தில் சாதகமான உத்தரவையும் அண்மையில் பெற்றது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக பவானிசாகர் அணையில், தனியாருக்குப் பதில் மீன் வளர்ச்சிக் கழகமே மீன் பிடித்து வருகிறது. அதேசமயம் தனியார் வசம் மீன் பிடி உரிமை இருந்த போது கிலோவிற்கு ரூ. 55 மீனவர்களுக்கு வழங்கப்பட்டது. இப் போது அது ரூ.35 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியாருக்கு கட்டுப்படி யாகும் கூலி வழங்கும் போது அரசு நிர் வாகம் ஏன் குறைத்து வழங்குகிறது என மீனவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மீன் வளர்ச்சி கழகத்தின் தனியார் மயத் திற்கு ஆதரவான நடவடிக்கை மற்றுமொரு போராட்டத்தை தூண்டும் வகையில் அமைந் துள்ளதாக மீனவ சங்கங்கள் தெரிவித் துள்ளன.
கொள்ளையர்களை பிடிக்க மறுக்கும் காவல்துறை
ஈரோடு, ஆக.22- ஈரோடு, கனிராவுத்தர்குளம் அருகே காந்தி நகரில் ஓம்காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் பாபு என்பவர் பூசாரி யாக உள்ளார். கடந்த 3 ஆம் தேதியன்று இக்கோயிலில் கொள்ளை நடந்தது. கோயில் மணி உள்ளிட்ட பாத்திரங்கள், பூஜை பொருட்களை கொள்ளையடிக்கப்பட்டு அருகில் உள்ள பழைய இரும்பு கடையில் விற்கப்பட்டுள்ளது தெரியவந்தன. இதை யடுத்து, அக்கடையில் இருந்து பொருள்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், கொள்ளையர்கள் குறித்து வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் கொள்ளையர்களை பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து, உயர் காவல் அதி காரிகள், ஆட்சியர் அலுவலகம் எங்கும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோவில் பூசாரியுடன் இணைந்து திருநங்கை ஒருவரும் தர்ணா வில் ஈடுபட்டனர். இதனைத்தொடரந்து பாது காப்பு பணியில் இருந்த போலீசார் நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை யடுத்து, போராட்டத்தை கைவிட்டனர்.
அசாம் மாநில வாலிபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது
கோவை, ஆக.22- அசாம் மாநில வாலிபரை தாக்கிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் லுன்மின் தாங் கொன்சாய் (24). இவர் கோவை ரத்தின புரி மருதகுட்டி தெருவில் வசித்து வருகிறார். பந்தையசாலையிலுள்ள அடுக்குமாடி குடியி ருப்பில் தூய்மை வேலை செய்து வரும் இவர், வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட் டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ரத்தினபுரி பக்தவச்சலம் தெருவில் 3 இளை ஞர்கள் சாலையில் நின்றிருந்தனர். அவர் களை ஓரமாக நிற்கும்படி லுன்மின் தாங் கொன்சாய் கேட்டுக்கொண்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி லுன்மின் தாங் கொன்சாயை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியதில் அவருக்கு தலை, உதடு உள் ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதைய டுத்து அக்கம் பக்கத்தினர் அவரை கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். அதில், அசாம் வாலிபரை தாக்கி யது ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருண் (21), ஓட்டுநர் சார் லஸ் (21), ராகுல் (20) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி, சிறையில் அடைத்தனர்.
நரிக்குறவர் சமூகத்தினருக்கு வீடு கோரிக்கை
ஈரோடு, ஆக.22- நரிக்குறவர் சமுகத்தை சேர்ந்தவர்கள் வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் திங்க ளன்று நடைபெற்றது. இதில், நரிக்குறவர் சமூகத்தவர்கள் அளித்த மனுவில், ஈரோடு, ரங்கம்பாளையம், அன்னை சத்யா நகர் பகுதி யில் 37 குடும்பத்தினர் வீட்டு வசதி வாரியத் துக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து கடந்த 45 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, வீடுகளை கட்டித்தர வேண்டும் எனக் கோரி பல முறை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
நிதி மோசடி: பேராசிரியர் பணியிடை நீக்கம்
சேலம், ஆக.22- மாணவர்களை தகாத முறையில் பேசிய தாகவும், துறை நிதியில் மோசடி செய்யதாக சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்வி யியல் துறை பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் நாச்சிமுத்து என்ப வர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது நிதி மோசடி, முறையாக மாண வர்களுக்கு வகுப்புகள் எடுப்பதில்லை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இந்த புகார் குறித்து பல்கலைக்கழக நிர் வாகம் விசாரித்த நிலையில், புகாரில் உண்மை தன்மை இருப்பதாக பேராசிரியர் நாச்சிமுத்துவை தற்காலிக பணி நீக்கம் செய்து பதிவாளர் தங்கவேல் உத்தரவிட் டுள்ளார். இதுகுறித்து துணை வேந்தர் ஜெகநாத னிடம் கூறியதாவது, பேராசிரியர் நாச்சி முத்து மீது பண மோசடி உள்ளிட்ட புகார்கள் உள்ளன. இந்த புகார் குறித்து முறையாக விசாரணை நடத்த குழு அமைக்கப்படும். அந்த குழுவின் விசாரணைக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணைக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இம்மாத இறுதியில் பேராசிரியர் நாச்சி முத்து ஓய்வுபெற இருந்த நிலையில், தற் பொழுது பணியிடை நீக்கம் செய்திருப்பது குறிப்பிடதக்கது.
ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
திருப்பூர், ஆக. 22 – திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. திருப்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந் துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆசிரியர் தேர்வு வாரிய 2023 ஆம் ஆண்டுத் திட்ட நிரலில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தோராயமாக 6553 காலிப் பணியிடங்களுக்கும், பட்ட தாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 3587 காலிப் பணியிடங் களுக்கும் நடப்பு ஆண்டில் தேர்வு நடத்தப்படவுள்ளதாக தெரி விக்கப்பட்டு உள்ளது. மேற்படி தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்களன்று தொடங் கப்பட்டது. இப்போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயில்வ தற்கு தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற தொலை பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள் ளலாம் என ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் படை வீரர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
திருப்பூர், ஆக. 22 - தமிழ்நாடு முதலமைச்சர் ஆக.15 சுதந்திர தின விழா செய்தி யில் 10ஆயிரம் முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.7 கோடி செல வில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவது குறித்து அறிவித்தார். இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட திறன் மேம்பாடு அலுவலகத்தின் மூலம் முன்னாள் படை வீரர்க ளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இப்பயிற் சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விருப்ப விண்ணப்பத்தினை சமர்ப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியரை கைது செய்க: போராட்டம்
திருப்பூர். ஆக.22- பல்லடம் அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியரை கைது செய்ய கோரி இந்திய மாண வர் சங்கத்தினர் பல்லடத்தில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பல்லடம் அரசு கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு அந்த துறைத் தலைவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். குழந்தை பாதுகாப்பு மையம், உதவி மைய எண்ணுக்கு அந்த மாணவி புகார் அளித்ததன்பேரில் பல்லடம் காவல் நிலை யத்தில் பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலர்கள் தலைமைறைவாக உள்ள பேராசிரியரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ள நிலையில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியரை உடனடியாக கைது செய்யக் கோரியும், கல்லூ ரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் பணியமர்த்தபட் டுள்ள முன் அனுபவம் இல்லாத பேராசிரியர்களுக்கு பயிற்சி யும், விழிப்புணர்வும் அளித்து மீண்டும் இப்படியான சம்பவங் கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து மாணவர் நலன் காத்திட வலியுறுத்தி மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கல்லூரி மாணவர் சங்கக் கிளை நிர்வாகி கண்ணன் தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், மாநிலக்குழு உறுப்பினர் ஷாலினி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில் 50க்கும் மேற் பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ரூ.2.20 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, ஆக.22- அவிநாசி அருகே ஒழுங் குமுறை விற்பனைக்கூடத் தில் நடைபெற்ற ஏலத்தில் 9 விவசாயிகள் கலந்து கொண்டு 90 மூட்டை நிலக்க டலையை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். குவிண் டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,300 முதல் ரூ.7,500 வரையிலும், இரண் டாம் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,300 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ. 6,800 முதல் ரூ.7,000 வரையிலும் ஏலம் எடுத்தனர். மொத்தம் ரூ.2.20 லட்சத் திற்கு ஏலம் நடைபெற்றது.
ஆக்கிரமிப்பு இடித்து அகற்றம்
நாமக்கல், ஆக.22- பள்ளிப்பாளையம் நக ராட்சி, பெரியார் நகர் பகுதி யில் ஒரு சிலர் அரசுக்கு சொந் தமான இடங்களை ஆக்கி ரமிப்பு செய்துள்ளனர். அதை அகற்ற குமாரபாளையம் வட் டாட்சியர் சண்முகவேல், பள் ளிபாளையம் வருவாய் அலு வலர் கார்த்திகா உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின் ஆக்கிரமிக்கப் பட்ட இடத்தில் கட்டப்பட்டி ருந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.
கீழடியை போன்று கேரளாவிலும் அகழ்வாராய்ச்சி
கோவை, ஆக.22- கீழடியை போன்று கேரளாவிலும் தொன்மையான பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் என கேரளம் அமைச்சர் அகமது தேவர்கோவில் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த துறைமுகம் மற்றும் அருங்காட்சியாக துறை அமைச்சர் அகமது தேவர்கோவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், துறைமுக மேம்பாட்டு வளர்ச்சியில் இந்தியா உன்னத நிலையை அடைந்து, மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. விழுஞ்சம் துறைமுகம் அமைந்தால் ஏராளமானவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். துறைமுகம் அமைவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் அங்கு உள்ளது. சமதளப் படுகைகளுடன் பல கப்பல்கள் சென்று வருவதற்கான அமைப்பு அங்குள்ளது அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்வது போல, கேரளாவிலும் ஒன்றிய, மாநில அரசுடன் இணைந்து அகழ்வாராய்ச்சி செய்வதற்கான திட்டங்கள் உள்ளது. ஒன்றிய அரசு நிலைப்பாட்டை பொறுத்து அது செயல்படுத்தப்படும், என்றார்.
கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது
நாமக்கல், ஆக.22- வெப்படை வழியாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், வெப்படை நான்கு சாலை சந்திப்பில் காவல் உதவி ஆய்வாளர் மலர்விழி தலைமையிலான காவ லர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொ ழுது, இரண்டு இளைஞர்கள் காவலர் வாகனத்தை கண்டதும், நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதனையடுத்து, காவல்துறையினர் விரட்டி சென்று, ஆனங்கூர் ரயில்வே கேட் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து அவர்களை சோதனை செய்தபோது, 2 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தில், இருவரும் கரூரைச் சேர்ந்த சரவணன் மற்றும் சுரேஷ் என்பதும், குமாரபாளையத்தில் இருந்து கரூருக்கு இரண்டு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து வெப்படை காவல் துறை யினர் 2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தினையும் பறிமுதல் செய்தனர். இதன்பின் இருவரையும் குமாரபாளையம் குற்ற வியல் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைத்தனர்.
கூண்டில் சிக்கிய கரடி முதுமலை வனப்பகுதியில் விடுவிப்பு
உதகை, ஆக.22- குந்தா வனப்பகுதியில் கூண்டில் சிக்கிய கரடி, முதுமலை வனப்பகுதி யில் விடுவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உதகை மற் றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 65 சதவிகிதம் வனப்பகுதியை கொண்டுள் ளது. சமீப நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, கரடி, காட்டெருமை, புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதி களில் அதிகமாக உலா வருகிறது. குறிப் பாக, மஞ்சூர் பகுதியில் கரடி மற்றும் காட்டெருமைகளும், கூடலூர் பகுதி யில் காட்டுயானைகளும், உதகையில் புலி நடமாட்டமும் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாத காலமாக கரடி ஒன்று குந்தா வனப்பகுதிக்குட்பட்ட அதிக ரட்டி பிரிவு, அதிகரட்டி காவல் நிலையம் அருகில் உள்ள கக்காச்சி மேல் பாரதி நகர், கீழ் பாரதிநகர், எம்.ஜி.ஆர்.நகர், கெந்தளா, மகாராஜா எஸ்டேட் பகுதி யில் உள்ள குடியிருப்புகுள் நுழைந்து கதவு மற்றும் ஜன்னல்களை சேதப் படுத்தி வந்தது. மேலும், வீட்டினுள் இருந்த உணவு பொருட்களை உண் டும், சேதப்படுத்தியும் வந்ததால், பொது மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடித்து மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஆக.7 ஆம் தேதியன்று கக்காச்சி பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், செவ்வாயன்று அதிகாலையில் அந்த கூண்டில் கரடி சிக்கியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர். இதைய டுத்து கக்காச்சி கிராமம் பகுதியில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட கரடி யினை முதுமலை புலிகள் காப்பகம் தெப்பகாடு வனச்சரகம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முது மலை புலிகள் காப்பகம் வனகால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் கரடியை பார்வையிட்டு பரிசோதனை செய்தார். இதில் கரடி நல்ல உடல்நிலையுடன் இருந்தது உறுதியானதால், தொட்டக் கட்டி பிரிவு, கக்கநல்லா வனப்பகுதியில் செவ்வாயன்று விடுவிக்கப்பட்டது.