அவிநாசி, பிப்.9- அவிநாசி அருகே பெருமாநல்லூர் பகுதிக்கு வந்து செல்லாத பேருந்துகளை பொதுமக்கள் ஞாயிறன்று சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையிலிருந்து ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்து கள், பெருமாநல்லூர் பகுதிக்கு வராமல் நெடுஞ்சாலை வழியாக சென்று விடுகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தொழிலாளிகள், கல்லூரி மாண வர்கள் உள்ளிட்டோர் சிரமப்பட்டு வந்தனர். அனைத்து பேருந்துகளும் பெருமாநல்லூர் பகுதிக்கு வந்து செல்லு மாறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொது மக்கள் ஞாயிறன்று பெருமாநல்லூர் புதிய திருப்பூர் அருகே தனியார் பேருந்துகளை சிறைபிடித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், பெருமாநல் லூர் வந்து செல்லாத தனியார் பேருந்துகளுக்கு அபரா தம் விதித்தனர். மேலும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி, பேருந்து களை அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.