சிஐடியு ஆர்ப்பாட்டம் சேலம், ஜன.10- ஊழியர்களின் சம்பளத்தை வழங்க மறுக்கும் தனியார் பேருந்து நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரபல பேருந்து நிறுவனமாக கேபிஎன் டிராவல்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்நிர்வாகத்தின் உரிமை யாளராக நடராஜன் உள்ளார். இந்நி றுவனத்தின் பேருந்து தமிழகம் மட்டு மன்றி அண்டை மாநிலங்களின் வழித் தடத்திலும் சென்று வருகிறது. இந் நிறுவனத்தில், ஏராளமான ஊழியர் கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு சேர வேண்டி ஊதி யத்தை கேபிஎன் நிர்வாகம் வழங்க மறுக்குகிறது. தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை தர மறுக் கும் நிர்வாக உரிமையாளர் நடரா ஜனை கைது செய்ய வேண்டும். சம்ப ளம் தராமல் இழுத்தடிக்கும் போக்கை நிர்வாகம் நிறுத்திக்கொள்ள வேண் டும் என்பதை வலியுறுத்தி சிஐ டியு சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் கேபிஎன் பேருந்து அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் முருகேசன், ஆட்டோ சங்க மாவட் டச் செயலாளர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.