நாமக்கல், பிப்.1- வெப்படை பகுதியில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் ஏராளமான நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி செல்லும் தனியார் பேருந்துகள் வெப்படை பகுதியில் நிற்காமல் சென்று வருவது வாடிக்கையான ஒன்றாக உள் ளது. இதனால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்துவது, பிறகு சிறிது நாளைக்கு பேருந்து நிற்பது, மீண்டும் நிற்காமல் செல்வது என தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று இரவு ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து வெப்படைக்கு செல்வதற்காக பயணி ஒருவர் பயணச்சீட்டு கேட்டுள்ளார். அதற்கு தனியார் பேருந்தின் நடத்துநர் வெப்படையில் பேருந்து நிற்காது என கூறியுள்ளார். இதனை ஏற்காத பேருந்து பயணி வெப்படை யில் உள்ள உறவினர்களுக்கும், பொதுமக்களுக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி செல்வதற்காக வெப்படை அருகே வந்த பொழுது தனி யார் பேருந்தை பொதுமக்கள் திடீரென சிறைபிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வெப்படை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நீண்ட நாட்களாக தொடரும் இந்த பிரச்சனைக்கு போக்குவரத்து துறையும், காவல்துறையும் இணைந்து உரிய தீர்வை அளிக்க வேண் டும் என்பது வெப்படை பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.