கோவை, ஜன.27- இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசி ரியர் இயக்கங்களின் கூட்டு நடவ டிக்கை குழு (டிட்டோஜாக்) சார் பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். எஸ்எம்சி கூட்டம் ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே நடத்த வேண்டும். உதவி பெறும் பள்ளி களில் நுழைவு கட்டணம் (என்ட்ரிபே) மட்டுமே பெற்று வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். பி.லிட் படித்து பதவி உயர்வு பெற்ற வர்கள், பி.எட் முடித்தவுடன் வழங் கப்படும் ஊதிய உயர்வுக்கான தணிக்கை தடையை நீக்க வேண்டும். 2019 ஜாக்டோ ஜியோ போராட்டம் சம்பந்தமான வழக்கு நிலுவை குற்றச்சாட்டு களை ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வுக்கு பனி மூப்பு மட்டுமே போதும், டெட் தேவை இல்லை என்ற மாநில அரசின் கொள்கை முடிவை நீதிமன்றம் மூலம் நிலை நாட்ட ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கோவை மாவட் டம் சிவானந்த காலனி, டாட்டா பாத் அருகே உண்ணாவிரதப் போராட் டம் நடைபெற்றது. முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கி ணைப்பாளரும், தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்டச் செயலாளரு மான அ.தங்கபாசு தலைமை வகித் தார். மேலும், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலப் பொருளாளர் த.முருகசெல்வராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி மாவட்டச் செயலா ளர் சி.அரசு, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ராஜசேகரன், தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட் டச் செயலாளர் சி.ரமேஷ்குமார், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட் டச் செயலாளரும், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாள ருமான ச.ஜெகநாதன், மாநில துணைத்தலைவர் அருளானந்தம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் (எஸ்டிஎப்ஐ) அகில இந்திய பொதுக்குழு உறுப் பினர் தோ. ஜான் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக, டிஎன்பி டிஎப் மாவட்டத் தலைவர் வெ.மணி கண்டன் நன்றி கூறினார்.