சேலம், நவ.30- பள்ளிக்கல்வித்துறையில் நடை பெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தி, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண் டும். உயர்கல்விக்கு பேரறிஞர் அண்ணா, ஆசிரியர்களுக்கு வழங்கிய ஊக்க ஊதிய திட்டத்தை மாற்றாமல் அப்ப டியே வழங்க வேண்டும். பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் நாட்டாமை கழக கட்டிடம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜான் பிரேம்குமார் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.மாய கிருஷ்ணன், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் டி.கோவிந்தன்,
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரி யர் கழக மாவட்ட செயலாளர் ஆதித்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலை வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித் தார். இதில், நேரடி நியமனம் பெற்ற முது கலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமு, பட்டதாரி ஆசிரி யர் கழக மாநிலப் பொருளாளர் மலர்க் கண்ணன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலப் பொருளாளர் முருக. செல்வராசன், தமிழ்நாடு ஆசிரியர் கூட் டணியின் மாநில துணைச்செயலாளர் சரவணன், முதுகலை பட்டதாரி ஆசிரி யர் சங்க மாநில துணைத்தலைவர் மாணிக்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர் கழக மாவட்ட செயலாளர் செந்தில் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் அருள்செல் வன் நன்றி கூறினார்.