districts

img

நலத்திட்டங்கள்: அமைச்சர் முத்துச்சாமி வழங்கினார்

கோவை, பிப்.3- ரூ.6 லட்சம் மதிப்பிலான விலை யில்லா மிதிவண்டிகளை மாணவர்க ளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி வழங் கினார். கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல்நிலைப் பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வீட்டு வசதித்துறை அமைச்சர்  முத்துசாமி கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கி னார்.  இதனைத்தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துச் சாமி, இந்த பள்ளியில் அனைத்து வச திகளும் இருப்பதை காண முடிகின் றது. ஒரு பள்ளியில் வந்து படிக்கின்ற  மாணவ மாணவிகள், பெற்றோர் களை விட, ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் எந்த துறையில் சிறப் பாக வருவார்கள் என முடிவெடுக்க  முடியும். இப்போது தமிழக முதல்வர்  பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏரா ளமான திட்டங்களை கொண்டு வந் துள்ளார். மேலும், விளையாட்டுத்து றைக்கு அமைச்சராக உள்ள உதய நிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு  வருகின்றார். கல்வி மற்றும் விளை யாட்டை நல்ல முறையில் பயன்ப டுத்திக் கொள்ள வேண்டும். ரூ.6 லட் சம் மதிப்புள்ள விலையில்லா மிதி வண்டி கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் விளையாட்டுப் போட்டிகளை மிக அருமையாக நடத் தியுள்ளனர். அரசு சார்பாக நலத்திட் நிகழ்ச்சி ஆர் எஸ் புரத்தில் நடை பெறுகிறது. ஏழை அடிதட்டு மக்கள்  பயன்படும் வகையில் அமைந்துள் ளது. மக்களோடு முதல்வர் திட் டத்தை தொடங்கி மக்கள் அளிக்கும்  மனுக்களுக்கு 30 நாட்களில் நடவ டிக்கை எடுத்து மிகச் சிறப்பாக மாவட்ட வாரியாக திட்டம் நடை பெற்று வருகிறது. மக்களின் பிரச்சி னைகளுக்கு முடிவு ஏற்படுத்தி தீர்வு  காணப்பட்டு வருகிறது. இதில் பல  லட்சம் மக்கள் தீர்வு காணப்பட்டுள் ளது.  601 பேருக்கு மனுக்களுக்கான  தீர்வை நாங்கள் வெள்ளியன்று கொடுக்கிறோம். அதில் 11 கோடியே  53 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பி லான நலத்திட்டங்கள் வழங்க உள் ளோம் விளையாட்டுத் துறை அமைச் சர் உதயநிதி வருகிற திங்களன்று (நாளை) ஈரோட்டில் நடைபெறும் நலத்திட்ட நிகழ்வில் பங்கு பெறுகி றார். அதே போன்று வருகின்ற பிப்.11 ஆம் தேதியன்று கோவையில் நடை பெறும் நிகழ்ச்சிக்கு வர உள்ளார். கோவையில் கட்டப்பட்டுள்ள கட்டி டங்கள் மற்றும் அடிக்கல் நாட்டு விழா  இருந்தாலும் மிக விரைவாக திறப்ப தற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை  எடுத்து வருகிறார். அரசு மருத்துவ மனை கட்டிடங்கள் மிக விரைவாக திறப்பதற்கான பணிகள் மேற்கொள் ளப்படும். இலவச மடிக்கணினி குறித் தான பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை தொடர்ச் சியாக செய்து வரும் தேர்தலுக்கு என்று தனியாக நாங்கள் வேலை  செய்யவில்லை. அரசு இருந்தபோ தும் சரி, இல்லாத போதும் சரி திமுக  தொடர்ச்சியாக மக்களுக்கு பணி செய்து வருகிறது. அந்த வகையில் தான் இப்போதும் பணி செய்து வரு கிறோம். தேர்தலை மனதில் வைத் துக் கொண்டு நாங்கள் பணி செய்வ தில்லை. மக்களை நோக்கி எப்போ தும் பணி செய்வோம் என்றார். இந்நி கழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந் திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந் தகுமார், எம்பி சண்முகசுந்தரம், துணைமேயர் வெற்றிச்செல்வன், திமுக மாநகர் மாவட்டச் செய லாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.