districts

img

சிட்கோவில் பாலர் பூங்கா தொடக்கம்

திருப்பூர், ஏப். 15 – திருப்பூர் அருகே முதலிபாளையம் சிட்கோ பகுதியில் பாலர் பூங்கா தொடங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு இந்திய மாணவர் சங்க செயற்குழு உறுப் பினர் ஆர்.சுதா தலைமை ஏற்றார். சிஐடியு பனியன் சங்க துணைச் செயலாளர் செல்வன், மாதர் சங்க தெற்கு ஒன்றியத்  தலைவர் எஸ்.ஜானகி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த லட்சும ணன், தங்கராஜ், அருணாசலம், கொடி மற்றும் சந்தியா உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பாலர் சங்கம் அமைக்கப்பட்டு அதன் தலைவர்  கார்த்திகேயன், துணைத் தலைவர் மாடசாமி, செயலாளர் சத்தியஜோதி, துணைச் செயலாளர் மதுலிகா, பொருளாளர்  சக்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.