திருப்பூர், ஜன.7- பாரதிய ஜனதா அரசின் தேச விரோத, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக பிப்ரவரி 23, 24 தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் அறி வித்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை முழு வெற்றி பெறச் செய் வது என்று திருப்பூரில் நடைபெற்ற ஆயத்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு நாட்டின் செல்வங்களான பொதுத் துறையை தனியாருக்கு அடிமாட்டு விலைக் குத் தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். தொழிலாளர் சட்டங்களை கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றி யிருப்பதை ரத்து செய்ய வேண்டும், சிறு, குறு தொழில்களை அழித்தொழிக்கும் மூலப்பொருட்கள் விலையேற்றம், ஜிஎஸ்டி வரி உயர்வை கைவிட வேண்டும். எரி பொருள் மீதான அநியாய வரி வசூலை கைவிட வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் பிப்ரவரி 23, 24 தேதிக ளில் நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தவும், அனைத்துப் பகுதி உழைப்பாளி கள் மத்தியில் வேலை நிறுத்த பிரச்சாரத்தை கொண்டு சென்று ஆதரவு திரட்டவும் திருப் பூர் கே.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. எல்பிஎப் மாவட்டத் துணைத் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலச் செயலா ளர் கோபிகுமார், மாவட்டத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் என்.சேகர், ஐஎன்டியுசி மாவட் டச் செயலாளர் அ.சிவசாமி, எச்எம்எஸ் மாநி லச் செயலாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எப் மாவட்டச் செயலாளர் மு.சம்பத் உள்ளிட் டோர் உரையாற்றினர். இந்த ஆயத்த மாநாட்டில் பிப்ரவரி 23, 24 இல் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அனைத்துப் பகுதி மக்களின் ஆதரவைத் திரட்டுவது, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று இம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங் களில் நாட்டைக் காப்போம், மக்களைக் காப் போம் என உறுதிமொழி ஏற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த இரு நாட் களும் திருப்பூர் மாவட்டத்தில் பெருந்திர ளான தொழிலாளர்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடத் துவது என்று தீர்மானிக்கப்பட்டது. முன்ன தாக, இந்த மாநாட்டில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிப், எம்எல்எப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங் களைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.