தாராபுரம், ஜன.12- தாராபுரத்தில் கீழே கிடந்த பையை காவல் நிலையத் தில் ஒப்படைத்த சுமை தூக்கும் தொழிலாளிக்கு பொன் னாடை போர்த்தி காவல்துணை கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந் தவர் ஹக்கீம், வியாபாரியான இவர் தாராபுரத்திற்கு பணி நிமித்தமாக வந்துள்ளார். அப்போது தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள அரிசிக்கடை அருகே பணம் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பையை தவ றவிட்டுள்ளார். இந்நிலையில் அந்த வழியில் வந்த தாரா புரம் புதுக்கோட்டை மேடு பகுதியை சேர்ந்த சுமை தூக் கும் தொழிலாளி சங்கிலிராஜன் என்பவர் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து தாராபுரம் காவல் நிலை யத்தில் ஒப்படைத்தார். பையை சோதனை செய்து அதில் இருந்து முகவ ரிக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பையை தொலைத்த ஹக்கீம் தாராபுரம் காவல்நிலை யத்திற்கு வந்து பையில் இருந்த பொருட்களை சரி பார்த்து காவல் ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலை யில் பெற்றுக்கொண்டு சங்கிலிராஜனுக்கு நன்றி தெரி வித்தார். கீழே கிடந்த பையை எடுத்து நேர்மையாக தாரா புரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்த சுமை தூக்கும் தொழிலாளிக்கு காவல் ஆய்வாளர் மணிகண்டன் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.