பள்ளிபாளையம், ஏப்.20- பள்ளிபாளையத்தில் விசைத் தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். கடந்த இரண்டு ஆண்டு களாக புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படாததால், நாமக்கல் மாவட்டம் விசைத்தறி தொழிலாளர் சங்கத் தின் சார்பில் பல்வேறு தொடர் இயக் கங்கள் நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி யன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங் கள் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலை யில், விசைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர்கள், நடத்திய முதல் சுற்று பேச்சுவார்த்தையில் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் புதிய கூலி உயர்வு ஒப் பந்தம் ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்திருந்தனர். அதன் அடிப் படையில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில், புதனன்று பள்ளி பாளையம் கன்னிமார் திருமண மண்டபத்தில் சிஐடியு, ஏஐசிடியு, ஏஐசிசிடியு உள்ளிட்ட சங்கங்கள் விசைத்தறி ஜவுளி உற்பத்தியா ளருடன் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இதுகுறித்து தொழிற்சங்க தலைவர்கள் கூறுகையில், வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை துவக்குவது எனவும், முதல் கட்டமாக ஒரு சத விகிதம் கூலி உயர்வு தருவதாகவும் விசைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர்கள் மற்றும் உரிமையாளர் கள் ஒப்புக்கொண்டுள்ளனர், அடுத்த சுற்று பேச்சுவார்த்தை யில்,மேலும் முன்னேற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.