districts

img

மின் கட்டண உயர்வு: டிச.12இல் மனித சங்கிலி

கோவை, டிச.5- மின் கட்டண உயர்வை திரும்பப்பெற கோரி டிசம்பர் 12 ஆம்தேதி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள் ளதாக கோவையில் தொழில் துறையினர் தெரிவித்தனர்.  கோவையில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர் வோர் கூட்டமைப்பு மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு, மறு சுழற்சி ஜவுளி கூட்டமைப்பின்  ஒருங்கிணைப் பாளர் டாக்ட் ஜேம்ஸ் செய்தியாளர்களை சந் தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத் தில் உள்ள தொழில் துறை நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு திரும்ப பெற வேண்டும் என்பது பிரதான கோரிக்கை, இதில் கடந்த  90 நாட்களாக கிட்டத்தட்ட எட்டு கட்ட போராட் டம் நடத்தினோம். இதில் தமிழக முதல மைச்சர்  கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற  நோக்கத்தில் அனைத்து துறை அமைப்புகளு டன் சேர்ந்து நாங்கள் இந்த போராட்டங்களை செய்து வருகிறோம். இதற்கு முன் வைக் கப்பட்ட கோரிக்கைகளை 50  சதவிகிதத்தை நிறைவேற்றி தந்தனர். இதில் பீக்கவர் மின் கட்டணமாக, ரூபாய் 3500 மின் கட்டணமாக கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. அந்த  தொகையை தவிர்க்க வேண்டும் அதே போன்று, த்ரீ ஏ ஒன் என்ற மின் கட்டண  விகிதாச்சாரத்தை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து, டிசம்பர் 12ஆம்தேதி தமிழகம் தழுவிய மனித சங்கிலி போராட் டம் நடத்த உள்ளோம் என்றார். முன்னதாக, இவ்வமைப்பின் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜே.ஜேம்ஸ்,  எம்.ஜெயபால், கோவை ஒருங்கிணைப்பா ளர்கள் சிவசண்முககுமார், சாகுல் ஹமீது, சுரேஷ்குமார், நடராஜன், சங்கரநாராயணன், ரவீந்திரன், நூர் முகம்மது, ராமநாதன், ஜெயக் குமார், பாலச்சந்தர், தி.மணி, பாலு மற்றும் தொழில் அமைப்பினர் ஏராளமானோர் பங் கேற்று, அடுத்த கட்ட போராட்ட தயாரிப்பு கள் குறித்து விவாதித்தனர்.