districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சாலை விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலி

பள்ளிபாளையம், பிப்.3- சரக்கு ஆட்டோ மோதி விசைத்தறி தொழி லாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள உள்ள புளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (44) விசைத்தறி தொழி லாளி. இவருக்கு ராதா என்ற மனைவியும், தக்ஷனா, பிரதீப் என்கிற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஆலாம்பாளை யத்தில்  உள்ள தறிப்பட்டறையில் இரவு  வேலைக்கு சென்று விட்டு வெள்ளியன்று காலை வீடு செல்வதற்காக கதிர்வேல் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்து  கொண்டிருந்தார். அப்பொழுது கருங்கல் பாளையத்திலிருந்து, சிமெண்ட் மூட்டை களை ஏற்றிக்கொண்டு வந்த டாட்டா ஏசி வாக னம், எதிர்பாராதவிதமாக புளியங்காடு தண் ணீர் தொட்டி பகுதி அருகே இரண்டு வாக னங்களும், பயங்கரமாக மோதி விபத்துக் குள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்த கதிர்வேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம் பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் போலீ சார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவன் உயிரிழப்பு

சூலூர், பிப்.3- ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவனும் பள்ளி மாணவியும் ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் அன்னமடை வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் அஜய் (19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். வெள்ளியன்று தனது நண்பரை பார்க்க வேறு ஒரு நண்பரு டன் வாகனத்தில் ராசிபாளையம் வந்துள் ளார். ராசிபாளையம் அருகே ரயில்வே  கேட் டுக்கு வந்தவுடன் கீழே இறங்கிக்கொண்ட அஜய் ஒருவரை சந்தித்து விட்டு வருகிறேன் எனக் கூறிவிட்டு சென்றுள்ளார். உடன் வந்த  நண்பர் நீண்ட நேரமாகியும் அஜய் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது நண் பர் ரயில்வே ட்ராக் அருகே சென்று பார்த்துள் ளார். அப்போது அங்கு அஜையும் மற்றொரு  பெண்ணும் ரயிலில் அடிபட்டு உயிருக்கு  துடித்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். மேலும், வெளியே ஓடிவந்து கூச்சலிட்டுள்ளார், அருகில் இருந்தவர்கள் உடன் சென்று பார்த்துள்ளனர். அப்போது, இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ள னர். இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசார ணையில், அஜய் உடன் இருந்த பெண், ராசி பாளையம் பகுதியைச் சேர்ந்த கீர்த்தி என்ப தும், ரயில்வே டிராக்கில் இருந்து அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது ரயில் வருவது  தெரியாமல் விபத்தால் இறந்தார்களா? என் பது குறித்து விசாரணை நடத்தி வருகின்ற னர். ரயில் முன் பள்ளி மாணவியும் கல்லூரி மாணவனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

20 விதை குவியல்களில் விதை விற்பனைக்கு தடை

ஈரோடு, பிப்.3- மொடக்குறிச்சி அருகே 20 விதை குவியல்களில் விதை விற்பனைக்கு தடை செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டார மையப்பகுதிகளில் அமைந்துள்ள விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி மற்றும் ஈரோடு விதை ஆய்வாளர் நவீன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, உரிய ஆவணங்களான பதிவுச் சான்றிதழ், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாத விதை குவியல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டறியப்பட்டு, 20 விதை குவியல்களில் விதை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. அதன்படி 958 கிலோ விதைகளின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சத்து 34 ஆயிரம் ஆகும். இதுகுறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி கூறுகையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச் சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் விதி மீறலாகும். விதி மீறும் விதை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.  மேலும், விதை விலை பட்டியல் பலகை, விதை கொள்முதல் பட்டியல், விதை இருப்பு பதிவேடு, உரிய தகவல்களுடன் விதை விற்பனை பட்டியல் ஆகிய ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கோவை - தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சேலம், பிப்.3- கோவை – தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மார்ச் மாதம் வரை  நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர் வாகம் தெரிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்திலி ருந்து கோவை வரை செல்லும் தன்பாத் - கோவை மற்றும் கோவை - தன்பாத் ஆகிய வாராந்திர சிறப்பு ரயில்கள் ஜன வரி மாதம் வரை இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறி வித்து இருந்தது. இந்நிலையில், பயணி களின் நலன் கருதி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், இந்த சிறப்பு ரயில் களின் சேவை காலம் மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலும் இந்த ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள் ளது. அதன்படி தன்பாத் - கோவை வாராந் திர சிறப்பு ரயில் (வண்டி எண்-03357)  மார்ச் 26 ஆம் தேதி வரை ஞாயிற் றுக்கிழமைகளில் தன்பாத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பொக் கோரோ ஸ்டீல் சிட்டி, மூரி, ரஞ்சி, ஹட் டியா, சாம்பல்பூர், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா, நெல்லூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மார்ச் 27 ஆம் தேதியன்று இரவு 12.30 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 12.35 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக மார்ச் 28  ஆம் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு கோவை சென்றடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் கோவை - தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்-03358) வருகிற பிப்.8  ஆம் தேதி முதல் மார்ச் 29 ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் கோவை ரயில் நிலையத்திலிருந்து இரவு 12.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் அதிகாலை 3.28 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் அதி காலை 3.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார் பேட்டை, காட்பாடி, நெல்லூர் வழியாக வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு தன்பாத் ரயில் நிலையம் சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவல கம் தெரிவித்துள்ளது.

தற்காலிக பாலம் அமைத்து இறந்தவரை தூக்கி சென்ற மக்கள்

ஓடையின் குறுக்கே நிரந்தர பாலம் அமைக்க கோரிக்கை

ஈரோடு, பிப்.3- கோபிசெட்டிபாளையம் அருகே ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து இறந்தவரின் உடலை உற வினர்கள் சுமந்து சென்றனர். எனவே, விரைந்து நிரந்தர பாலம் கட்ட வேண் டும் என்று கோரிக்கை விடுத்துள்ள னர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சாணார் பதி பகுதியில் சுமார் 120க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின் றனர். இப்பகுதியில் இறந்தவர்களை கீரிப்பள்ளம் ஓடையின் அக்கரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய் வார்கள். இந்நிலையில், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் செல் லும் கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் பழுத டைந்து இருந்தது. இதனால் அந்த இடத்தில் பாலம் இடித்து அகற்றப் பட்டது. ஆனால், மீண்டும் ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. இதனால் சாணார்பதியில் யாராவது  இறந்தால் ஓடையின் குறுக்கே அவ ரது உடலை சுமந்து செல்ல தற்காலிக பாலம் அமைக்க பொதுமக்கள் முடிவு செய்தனர். இந்நிலையில், சாணார்பதியைச் சேர்ந்த பாவுகுட்டி என்கிற பாவா யாள் (82) என்பவர் புதனன்று இரவு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக் கள் நிதி வசூல் செய்து, வியாழனன்று ஒரேநாளில் ஓடையின் குறுக்கே தற் காலிக பாலம் அமைத்தனர். இதன் பின் பாவாயாள் உடலை உறவினர் கள் தற்காலிக பாலம் வழியாக சுமந்து சென்று, அக்கரையில் அடக்கம் செய் தனர். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், கோபி பகுதி யில் இருந்து வரும் கழிவுநீருடன் சேறும், சகதியுமாக கீரிப்பள்ளம் ஓடையில் தண்ணீர் செல்கிறது. மேலும், பிளாஸ்டிக் பாட்டில்களும் மிதந்து வருவதால் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. ஓடையின் குறுக்கே பாலம் கட்ட 3 முறைக்கும் மேல் அடிக் கல் நாட்டும் பணிகள் நடைபெற்றும், தற்போது வரை அதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் அப்பகுதியில் யாராவது இறந்து விட்டால் இறந்தவரின் உடலை அடக் கம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, விரைந்து ஓடை யின் குறுக்கே பாலம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.

இன்று மின்தடை

சேலம், பிப்.3- சேலம், கிச்சிப்பாளை யம் துணை மின்நிலையத் தில் பராமரிப்பு பணிகள் சனி யன்று (இன்று) நடைபெற உள்ளது. இதனால், தாது பாய் குட்டை, கடைவீதி, ஆட் சியர் அலுவலகம், செவ்வாய் பேட்டை, முதல் அக்ரஹா ரம், பிரட்ஸ் ரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி, களரம் பட்டி, பில்லுக்கடை, குகை, எருமாபாளையம், சன்னி யாசிகுண்டு, நாராயணநகர், லைன்மேடு, வள்ளுவர்நகர், ஆகிய பகுதிகளில் சனி யன்று (இன்று) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  மின்சார விநியோகம் இருக் காது.

வளர்ச்சி திட்ட பணிகள்: ஆணையர் ஆய்வு

சேலம், பிப்.3- சேலம் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும்  பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதன்படி அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.96 கோடியே 53 லட்சத்தில் நடைபெற்று வரும் 2  அடுக்கு பேருந்து நிலைய கட்டுமான பணியை பார்வையிட்டு  ஆய்வு செய்தார். இதன்பின் திருமணிமுத்தாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை பார்வையிட்டார். அப்போது பணியின்  முன்னேற்றம் குறித்தும், முழுமையாக பணிகள் முடிவுறும்  நிலை குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து  பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தர விட்டார். இதைத்தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  ரூ.27 கோடியில் சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட பள்ளப் பட்டி ஏரியை புனரமைத்து அழகுப்படுத்தும் பணியை  ஆய்வு ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு  புதிய ஆணையர் பொறுப்பேற்பு

திருப்பூர், பிப்.3- திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக பவன்கு மார் ஜி.கிரியப்பனவர் வெள்ளியன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அலுவல கத்தில் முன்னாள் ஆணையர் கிராந்தி குமார் பாடி பொறுப்பு களை அவரிடம் ஒப்படைத்தார். இந்திய ஆட்சிப்பணி தேர்வு பெற்ற பவன்குமார் ஜி.கிரியப் பனவர் இதற்கு முன்பாக கடலூர் மாவட்ட திட்ட இயக்குநராக  பணியாற்றி வந்தார். திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட பவன்குமார், மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார், துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகி யோரை சந்தித்தார். அவருக்கு, பணி சிறக்க மேயர் வாழ்த்து  தெரிவித்தார். வழியனுப்பு விழா இதுவரை திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பணி யாற்றிய கிராந்தி குமார் பாடி கோவை மாவட்ட ஆட்சிய ராக பொறுப்பேற்க இருக்கிறார். வியாழனன்று மாலை திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராந்தி குமார் பாடிக்கு  வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர்  ந.தினேஷ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு  அவருக்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்த னர்.

ஆட்சியரின் பெற்றோரிடம் கத்தியைக் காட்டி   தங்க நகை, ரொக்கப்பணம் கொள்ளை

ஆட்சியரின் பெற்றோரிடம் கத்தியைக் காட்டி   தங்க நகை, ரொக்கப்பணம் கொள்ளை அவிநாசி, பிப்.3- அவிநாசி அருகே லூர்தபுரத்தில் உள்ள தருமபுரி மாவட்ட  ஆட்சியரின் பெற்றோர் வீட்டில் புகுந்த இரு நபர்கள் கத்தி யைக் காட்டி மிரட்டி 7 பவுன் தங்கநகை மற்றும் ரொக்கப்ப ணம் ரூ.7000 ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ள னர். அவிநாசி அருகே மங்கரசுவளையபாளையம் ஊராட்சி  லூர்துபுரம், பிள்ளையார் கோயில் தோட்டத்தை சேர்ந்தவர்  கிருஷ்ணசாமி (86). இவரது மனைவி சரஸ்வதி (78). இவர்கள்  இருவரும் தனியாக தோட்டத்தில் வசித்து வருகின்றனர். இவர் களது மகன் ரமேஷ் குமார் பனியன் நிறுவனம் நடத்தி வரு கிறார். மூத்த மகள் ராதாலட்சுமி துடியலூர் அரசு பள்ளியில்  ஆசிரியராகவும், இளைய மகள் சாந்தி தருமபுரி மாவட்ட ஆட்சி யராகவும் உள்ளார். முதியவர்கள் தனியாக தோட்டத்தில் வசித்து வரும் நிலையில், வியாழனன்று அதிகாலை வீட் டின் கதவின் உள் தாழை உடைத்து உள்ள புகுந்த நபர் கள், கத்தியை காட்டி மிரட்டி முதியவர் கிருஷ்ணசாமியை சுத்தியால் கையில் தாக்கியுள்ளனர். பிறகு மூதாட்டி  சரஸ்வதியையும் சேலையால் கட்டிப் போட்டு மிரட்டியுள்ள னர். இதைதொடர்ந்து, அணிந்திருந்த கம்மல் உள்பட 7 பவுன்  தங்கநகை, ரொக்கப் பணம் ரூ.7000 ஆகியவற்றை அடையா ளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது  குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நிப்ட்-டி கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு  பிப்.5 ஆம் தேதியன்று நுழைவுத்தேர்வு

திருப்பூர், பிப்.3- நிஃப்ட் - டி பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு  கல்லூரியில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க் கைக்கு முதல் கட்ட நுழைவுத் தேர்வு வரும் ஞாயிறன்று நடை பெறுகிறது. திருப்பூர், முதலிபாளையம் சிட்கோ பகுதியில் நி ஃப்ட்-டி  பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லூரி செயல் பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வி  ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட நுழைவுத் தேர்வு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிறன்று கல்லூரி வளா கத்தில் நடைபெற உள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் மூலமாக பாரதியார்  பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 1997 ஆம் ஆண்டு முதல்  கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு முக்கிய பட்டப்படிப்பு  வகுப்புகளில் பயில்வதற்கு நுழைவுத்தேர்வு அடிப்படையில்  மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது .இளங்கலை பி.எஸ்.சி.,  பிரிவில் அப்பேரல் ஃபேஷன் டிசைன், அப்பேரல் மேனுஃ பேக்சரிங் அண்ட் மெர்சன்டைசிங், காஸ்டியூம் டிசைன் அண்ட்  ஃபேஷன், ஃபேஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட், கார் மெண்ட் டிசைன் அண்ட் புரொடக்சன் போன்ற பட்ட வகுப்புக ளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம் சிஏ, பிகாம்.பிஏ.,  பிபிஏ ஐ பி, எம்.எஸ்சி., அப்பேரல் ஃபேஷன் டிசைனிங், மற்றும்  முதுகலை டிப்ளமோ படிப்பு அப்பேரல் மெர்ச்சன்டைசிங் அண்ட் மேனேஜ்மெண்ட் போன்ற வகுப்புகளுக்கான சேர்க் கையும் தொடங்க உள்ளது.  இது குறித்து மேலும் விபரம் அறிய கல்லூரி இணைய  தளத்தின் வாயிலாகவும் www.nifttea.ac.in  முன்பதிவு செய்ய வேண்டும்.  கூடுதல் விபரங்களுக்கு 80563 98111 மற் றும் 80569 31111 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு விளக் கம் பெற்றுக் கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித் துள்ளது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த பின்னர் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட நுழை வுத் தேர்வு நடைபெறும் என்றும் கல்லூரி முதல்வர் கே.பி.  பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று மின்தடை

அவிநாசி, பிப்.3- அவிநாசி துணைமின்நிலையத்தில் மாதாந்திர மின் பராம ரிப்புப்பணிகள் பிப்.4 ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே,  அவிநாசி, வேலாயுதம்பாளையம், இராக்கியாபாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளை யம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காம ராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேயூர் ரோடு, வ.உ,சி  காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரதவீதிகள், அவிநாசிகை காட்டிபுதூர், சக்திநகர், குமரன்காலனி, அவினாசிலிங்கம்பா ளையம், எஸ்.பி.அப்பேரல்ஸ்., இராக்கியாபாளையம்   ஆகிய  பகுதிகளில் இன்று  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின் விநியோகம் தடைபடும் என்று அவிநாசி மின்கோட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

ரூ.49 லட்சத்து 57 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி, பிப்.3-  அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்களன்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில்  ரூ.49லட்சத்து 57 ஆயிரத் துக்கு  பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.   இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, மொத்தம்   1985 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச்.  பி.டி.ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு  ரூ. 7000 முதல் ரூ.8389  வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ. 2500 முதல் ரூ.3500 வரையிலும் ஏலம் போனது. மேலும் ஆர்.சி.எச்.பி.டி.ரகப்பருத்தி மற்றும் டி.சி.எச். ரகப்ப ருத்தி குவிண்டாலுக்கு ரூ. 600 வரை விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மின் கட்டணம் அதிகமாக கணக்கீடு செய்யப்பட்டதாக புகார்: மின்வாரிய செயற்பொறியாளர் மறுப்பு

தாராபுரம், பிப்.3- தாராபுரம் அருகே குண்டடத்தில் உள்ள ஒரு மின் இணைப்பில் மின்  கட்டணம் அதிகமாக கணக்கீடு செய் யப்பட்டதாக புகார் தெரிவித்திருந்த நிலையில், தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் மறுப்பு தெரி வித்து அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளதாவது, தாராபுரம் கோட்டம், குண் டடம் உபகோட்டம், குண்டடம் வடக்கு பிரிவில் உள்ள கணக்கீட்டா ளர் பணிக்கு வராமல் இருந்ததை தொடர்ந்து மாற்று ஏற்பாடு செய்யப் பட்டு மின் கணக்கீடு செய்யப்பட்ட தில், ஒரு குறிப்பிட்ட மின் இணைப் பில் கூடுதல் மின்சாரம் பயன்படுத்தப் பட்டது பதிவாகி இருந்தது. அந்த மின்  இணைப்பின் மின்பளு 2.1 கி.வாட்  இருப்பதும். தொடர்ந்து கிரைண்ட ருக்காக மின்சாரம் பயன்படுத்தி வரு வதும் உறுதி செய்து தோராயமாக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை  சுமார் 480 யூனிட்டுகள் முதல் 510  யூனிட்டுகள் வரை மின்சாரம் செலவா கும் என சம்பந்தப்பட்ட நுகர்வோ ருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அத னால் ரூபாய் 16 ஆயிரத்து 258  என்ற தொகை கட்ட வேண்டியுள்ளது  என்று தெளிவாக கூறப்பட்டதை தொடர்ந்து, நுகர்வோருக்கு அத்தொ கையினை நான்கு தவணைகளாக செலுத்த அவகாசம் அளிக்கப்பட் டது. ஆனால் இந்த உண்மையினை மறைத்து சுமார் ரூ. 35 ஆயிரம் மின்  கணக்கீட்டு தொகை எனவும், 8 மாத ங்கள் கழித்து மின் கட்டணம் கணக் கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தவறான தகவல்களை சமூக வலைத் தளங்களில் பரப்பி வருகின்றனர். மின்வாரிய விதிகளுக்கு உட்பட்டு அனைத்து விதிமுறைகளும் கடைபி டிக்கப்பட்டு கணக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதில் விதிமீறலோ குழப் பமோ நடைபெறவில்லை. மேலும்  அந்த பகுதியில் உள்ள கணக்கீட்டா ளர் மீது துறை ரீதியான நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:48.35/60அடி நீர்வரத்து:789கன அடி வெளியேற்றம்:1128கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:71.49/90அடி.நீர்வரத்து:42கனஅடி வெளியேற்றம்:418கனஅடி

வள்ளலார் நினைவு தினம்: நாளை மதுக்கடைகள் மூடல்

திருப்பூர், பிப். 3 - வடலூர் ராமலிங்க அடிக ளார் நினைவு தினத்தை முன் னிட்டு ஞாயிறன்று  (நாளை) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபானக்  கூடங்கள், மனமகிழ் மன்றங் கள், உணவு விடுதியுடன்  செயல்படும் அரசு உரிமம்  பெற்ற மதுபானக் கூடங்கள்  ஆகியவை மூடப்பட்டு மது பான விற்பனை நிறுத்தப்பட வேண்டும். தவறினால் சட் டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாவட்ட ஆட்சி யர் எஸ்.வினீத் வெள்ளி யன்று விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருக்கிறார்.

உதகை: குழந்தை தொழிலாளர் மீட்பு

உதகை: குழந்தை தொழிலாளர் மீட்பு உதகை, பிப்.3- தனியார் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணி புரிகிறார்களா? என்று தொழிலாளர் நலத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நாய் பண்ணையில் பணியாற்றிய குழந்தை தொழிலாளர் ஒருவர் மீட்கப்பட்டார். ஒன்றிய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுத்து வரு கிறது. ஆனாலும், குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். இதன்படி நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட தொழிலா ளர் நலத்துறை அதிகாரி அமலாக்கம் சதீஷ்குமார் தலைமை யில் உதகை மற்றும் கேத்தி பகுதிகளில் தோட்ட நிறுவனங்கள், கடைகள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற் றும் பிற இடங்களில் குழந்தை தொழிலாளர் பணிபுரிகிறார் களா? என ஆய்வு நடத்தப்பட்டது. இதில் உதகை போன் ஹில் பகுதியில் நாய் பண்ணையில் பணியாற்றிய 16 வயது சிறுவன் மீட்கப்பட்டார். இதைய டுத்து இது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குழந்தை தொழிலா ளர் முறை ஒழிப்பு குறித்து உரிய விழிப்புணர்வு வழங்கப் பட்டது.

வளர்ப்பு நாயுடன் வீட்டுக்கு ‘சீல்’ வைப்பு

கோவை, பிப்.3- கோவையில் புதனன்று வளர்ப்பு நாயுடன் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, புலியகுளம், பெரியார் நகர்  பகுதியைச் சோ்ந்த தொழிலதிபர் பாபுகுமார். இவர், கோவை சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந் தியா வங்கியில் கடந்த 2014 ஆம் ஆண்டு வீட் டுக்கடன் பெற்றுள்ளார். குறித்த காலத்தில் வீட்டுக்கடனை செலுத்தாததால் வீடு ஏலத் திற்கு வந்தது. வீட்டை தானே வாங்கிக் கொள் வதாக பாபு குமார் கூறியிருந்தபோதிலும் அதை வங்கி அதிகாரிகள் ஏற்காமல் வீட்டை  ஏலத்தில் விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட நீதிமன்றத்தில் பாபுகுமார் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பாபுகுமாரின் வீட்டுக்கு காவல் துறையினருடன் புதனன்று வந்த வங்கி அதி காரிகள் வீட்டிலிருந்த அனைவரையும் வெளியே வரவழைத்து திடீரென வீட்டுக்கு ‘சீல்’ வைத்துள்ளனர். வீட்டுக்குள் வளர்ப்பு நாயும் இருந்துள்ளது. அப்போது, தேவை யான மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும், நாயையும் வெளியே கொண்டு வர அனுமதிக்குமாறு கேட்டதற்கு வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக ராமநாதபுரம் காவல் நிலையத் தில் பாபுகுமார் புகார் அளித்த நிலையில், சுமார் மூன்றுமணி நேரம் கழித்து நாய் மட்டும் வெளியே விடுவிக்கப்பட்டது.

தொடர்ந்து 100 நாள் வேலை வழங்கிடுக

தொடர்ந்து 100 நாள் வேலை வழங்கிடுக நாமக்கல், பிப்.3- நாமக்கல், புதுச்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகு திகளில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் அடிப்படையில், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக பட்டியலின சமு தாய மக்களுக்கு  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் அடிப்படையில்  தொடர்ந்து பணிகள் வழங்க வேண்டும் என வலியு றுத்தி, தமிழ் புலிகள் அமைப் பினர் வட்டார வளர்ச்சி அலு வலரிடம் மனு அளித்தனர். இதில், அமைப்பின் நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.