திருப்பூர், பிப்.15- அனைத்திந்திய அஞ்சல் - ஆர்.எம். எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் (ஏஐபிஆர் பிஏ) சார்பில் திருப்பூரில் ஐந்தாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத் திய வரவேற்பு குழுவினருக்கு பாராட்டி, நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற் றது. ஏஐபிஆர்பிஏ அமைப்பின் ஐந்தா வது தமிழ்நாடு மாநில மாநாடு கடந்த டிசம்பர் 1, 2 தேதிகளில் திருப்பூரில் நடை பெற்றது. இம்மாநாட்டை சிறப்பான முறையில் வெற்றிகரமாக நடத்தி கொடுத்த வரவேற்பு குழு ஊழியர்க ளுக்கு பாராட்டு தெரிவித்து நன்றி தெரி விக்கும் விழா செவ்வாயன்று பார்க் ரோடு கே.எஸ்.ஆர். திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. வரவேற்பு குழு செயல் தலைவர் கே. ராமமூர்த்தி தலைமையில், பொதுச் செயலாளர் ஏ.ராஜேந்திரன் வரவேற் றார். இந்நிகழ்வில் அமைப்பின் அகில இந்திய தலைவர் கே.ராகவேந்திரன், மாநிலத் தலைவர் ஏ.பழனிச்சாமி, மாநி லச் செயலாளர் பி.மோகன், மண்டலச் செயலாளர் எஸ்.கருணாநிதி மற்றும் நிர் வாகிகள் ஈரோடு ஆர்.செல்வராஜ், கே. ஆர்.கணேசன், நேதாஜி, பி.கே.ராம சாமி, என்.முத்துசாமி, கோவை முகமது ஹம்சா உள்ளிட்டோர் வாழ்த்து பேசி னர். இந்நிகழ்வில் மாநாட்டை வெற்றி கரமாக நடத்திய வரவேற்பு குழுவின ருக்கு சால்வை அணிவித்து சிறப்பிக் கப்பட்டது. சுமார் 180 பேர் கலந்து கொண் டனர். நிறைவாக நிதி செயலர் என்.கருப் புசாமி நன்றி கூறினார்.