நாமக்கல், ஜூலை 4– கரும்புக்கு பரிந்துரை விலையை அறி வித்து தமிழக அரசு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொன்னி சர்க்கரை ஆலை மாநாடு வலி யுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பொன்னி சர்க்கரை ஆலை மாநாடு முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் உரையாற்றினார். இதில், ஒரு டன் கரும்புக்கு ஒன்றிய, மாநில அரசுகள் ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். வருவாய் பங் கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து, மாநில அரசு கரும்புக்கு விலை எஸ்ஏபி அறிவித்து வழங்க வேண்டும். பொன்னி சர்க்கரை ஆலை 2013-14 முதல் 2016-17 வரை நான்கு ஆண்டுகள் விவசாயிகளுக்கு தரவேண்டிய எஸ்ஏபி நிலுவைத்தொகை ரூ.70 கோடியை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண் டும். முத்தரப்பு கூட்டம் நடத்தி கரும்பு வெட் டுக்கூலியை முறைப்படுத்த வேண்டும். வெட்டுக்கூலியில் 50 சதவிகிதத்தை சர்க் கரை ஆலை ஏற்றுக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் பொன்னி சர்க்கரை ஆலை தலைவராக இ.முத்துசாமி, செயலாளராக செ.நல்லாக்கவுண்டர், பொரு ளாளராக ஏ.பி.பழனிசாமி உட்பட 25 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட் டது. மாநாட்டை நிறைவு செய்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி. பெருமாள் உரையைற்றினார்.