districts

img

திருப்பூர் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

திருப்பூர், ஜன. 9 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேசன்  கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல்  பரிசுத் தொகுப்பு விநியோகம் திங்களன்று தொடங்கியது. பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ கத்தில் அரிசிக் குடும்ப அட்டைதாரர்க ளுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க் கரை, முழு நீள கரும்பு மற்றும் ரூ.1000 ரொக் கம் , இலவச வேட்டி, சேலை ஆகியவை  பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்க தமிழக  அரசு முடிவு செய்து அறிவித்தது. அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000  ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்வை திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்  தொடங்கி வைத்தார்.திருப்பூர் மாவட்ட நுகர் வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை கூட்டுறவு நியாய விலைக்கடையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்  எஸ்.வினீத் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.1,000 ரொக் கப்பணம் மற்றும் இலவச வேட்டி, சேலை யும் வழங்கினார். திருப்பூர் மாவட்டத்திற்கு 797 மெட்ரிக்  டன் பச்சரிசியும், 797 மெட்ரிக் டன் சர்க்கரை யும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரொக்கம் தலா ரூ.1000 வழங்கிட ரூ79.75 கோடியும், கரும்பு கொள்முதல் செய்திட ரூ.2.63 கோடி யும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற் கான மொத்த செலவினம் திருப்பூர் மாவட்டத் திற்கு மட்டும் ரூ.82.33 கோடி பரிசு தொகுப் பிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப் பட்டு உள்ளது என்று ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்தார். இந்த பொங்கல் பரிசுத் தொகுப் பினை திருப்பூர் மாவட்ட குடும்ப அட்டைதா ரர்கள் திங்களன்று முதல் ஜனவரி 14  ஆம் தேதி வரை நியாய விலைக் கடைகளில்  பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டைதா ரர்கள் சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப் பினை பெற்றுக் கொள்ள ஏதுவாக சுழற்சி  முறையில் தினசரி 250 குடும்ப அட்டைதா ரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பரிசுத்  தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.  சிரமமின்றி கூட்ட நெரிசலின்றி பரிசுத்தொகுப் பினை பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட் டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு  வழங்கப்பட்டதும், பயனாளிகளின் பதிவு  செய்யப்பட்ட கைபேசிகளுக்கு குறுஞ் செய்தி அனுப்பப்படும்.  நியாய விலைக் கடைகளுக்கு வரும்  குடும்ப அட்டைதாரர்கள் ஒருவரோடு ஒருவர்  நெருங்கி நிற்பதை தவிர்க்கும் விதமாக ஒரு  மீட்டர் இடைவெளி விட்டு தனித்து நின்று  தனிமனித இடைவெளியை தீவிரமாகப் பின் பற்றி கொரோனா தொற்றினை தவிர்த்திட வும் கேட்டுக் கொள்வதாக மாவட்ட ஆட்சி யர் எஸ்.வினீத் கூறினார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் சார் ஆட்சியர்  ஸ்ருதன் ஜெய் நாரயணன், இணைப்பதிவா ளர் (கூட்டுறவு சங்கங்கள்) சொ.சீனிவாசன் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.