கோவை, நவ.25- கோவை மாநகரத்தில் யூ டர்ன் நடைமுறைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும், குறிப்பாக நெரி சலில் சிக்காமல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து செல்வதாகவும், பாதசாரிகளின் உயிரி ழப்பு பெரிய அளவிற்கு குறைந்துள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ் ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் கோவை பசுமை வட்டங்கள் என்ற பெய ரில், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வீடியோ வெளியிட்டார். 7 நிமிடம் ஒடும் அந்த வீடியோவில் தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக ளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ரவுண்டானாக் கள் மற்றும் ‘யு டர்ன் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இதனைத்தொடர்ந்து காவல் ஆணையர் செய் தியாளர்களிடம் கூறுகையில், கோவை அவிநாசி சாலையில், 25 இடங்களில் போக்குவரத்து சிக் னல்கள் அகற்றப்பட்டுள்ளது. மாநகரில் மொத்தம், 23 இடங்களில் யு டர்ன் மற்றும், 7 இடங்களில் ரவுண்டானாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. யூ டர்ன் நடைமுறைக்கு பின், அவிநாசி சாலை யில், வாகனங்கள் நிற்காமல் தொடர்ந்து சென்று வருகிறது. 2022 ஆம் ஆண்டு அவிநாசி சாலையில் நடந்த சாலை விபத்துகளில் 12 பாதசாரிகள் உயிரிழந்த னர். ஆனால் 2023-ம் ஆண்டு அவிநாசி சாலையில் சாலை விபத்தில் ஒரு பாதசாரி இறந்து உள் ளார். கடந்த ஆண்டு போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு வரு வதற்கான நேரம் 11:24 நிமிடங்களாக இருந்தது. ஆனால், தற்போது அது 7:22 நிமிடமாக குறைந் துள்ளது என்றார். இதனையடுத்து, காவல் ஆணையர் பால கிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் அவிநாசி சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது அவர் அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி அருகிலும், பீளமேடு அரோமா பேக்கரி அருகிலும் பாதசாரிகள் எளிதில் கடக்க பெலிகன் (பாதசாரி கள்) சிக்னல்களை இரண்டு வாரங்களில் அமைக்க உத்தரவிட்டார்.