சேலம், மார்ச் 25- தேர்தல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில், காவல்துறையினர் கொடி அணி வகுப்பு நடத்தினர். சேலம் அன்னதானப்பட்டியில் நடை பெற்ற கொடி அணிவகுப்பிற்கு மாநகரக் காவல் துணை ஆணையர் மதிவாணன் தலைமை வகித்தார். இதில் உதவி ஆணையர் ராமமூர்த்தி உட்பட காவல் துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் கலந்து கொண்டனர். முன்ன தாக, இந்த அணிவகுப்பு பேரணி கிச்சிபாளையம், சேலம் நகரக் காவல் நிலையம், கொண்டலாம்பட்டி, எருமபாளை யம் மெயின் ரோடு முதல் மூன்று தியேட்டர் வழியாக நாரா யண நகர் பகுதியில் நிறைவடைந்தது.