கோவை/ சென்னை, மார்ச் 8- குடும்ப வன்முறைக்கு எதிராக போராட்டங்களை தொடர்ந்து மேற் கொள்வோம் என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் உறுதியேற்றது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்ச் 8 புதனன்று தமிழகம் முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பிலும் பல்வேறு மாவட்டங் களில் பெண்கள் கூட்டுக்குழு சார்பி லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் குமரி மாவட்ட பெண்கள் கூட்டுக்குழு சார்பில் “சமத் துவத்திற்காக ஒன்றுபடுவோம்” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி பங்கேற்று உரையாற்றினார். கூட்டுக் குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோவை
கோவை. பெரியார் திடலில் சர்வ தேச மகளிர் தின விழா அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துடன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், சிஐடியு, தவிச, விதொச ஆகிய அமைப்புகள் இணைந்து கொண்டாடப்பட்டது. இந்நி கழ்வுக்கு, மாதர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி தலைமை ஏற்றார். வாலிபர் சங்க இளம் பெண்கள் உபகுழு கன்வீனர் தீபிகா வர வேற்புரை யாற்றினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் பி.சுகந்தி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி னர். பி.சுகந்தி பேசுகையில், “நூறு ஆண்டுகளுக்கு முன்பு சதி என்னும் கொடுமைக்கு எதிராக போராடினோம். தற்போது குடும்ப வன்முறைகளுக்கு எதிராக போராடி வருகிறோம். சாதி, மத வன்முறை, ஆணவக் கொலைகளை தடுக்க வேண்டிய அவசியமும் உள் ளது. குடும்ப வன்முறை உள்பட, பெண் கள் மீதான வன்முறைகள் தொடர்பாக இந்தியாவில் மூன்று லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வேத னை என்னவென்றால், இந்த வழக்கு களில் 81 சதவிகிதம் ஆண்கள் கொடு மைப்படுத்துவது உரிமை என வாதிடு கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சிறுமி கொடூரமாக பாலியல் வன்பு ணர்வு செய்யப்பட்டார். 18 நாள் விசா ரணை எதுவும் நடைபெறாத நிலையில், அந்த சிறுமி இறந்து விடுகிறார். அலகா பாத் நீதிமன்றம், தானாக முன் வந்து வழக்கை பதிவு செய்கிறது. ஆனால் வழக்கின் உண்மையை மறைக்க காவல் துறை உடனே அந்த பெண்ணின் உடலை எரித்து விடுகிறது. மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்ற காரணத்திற்காகத்தான் அந்த காரியத்தை காவல்துறை அரங்கேற்று கிறது. இந்திய அரசியலமைப்புச் சட் டத்தைஏற்காத, மனுஅதர்மத்தை பின் பற்றுகிற பாஜக ஆட்சியில் பெண்க ளுக்கு எதிரான கொடுமைகளுக்கு தீர்வு கிடைப்பது அரிதானது.
வழிகாட்டும் கேரளம்
கேரள மாநிலத்தில் கல்லூரியில் சேரும் மாணவர்களிடையே வரதட்ச ணை வாங்க மாட்டேன் என உறுதி மொழி பெறப்படுகிறது. இந்த உறுதி மொழியை மீறினால் எதிர்காலத்தில் பட் டத்தை திரும்பப் பெறுகிற உரிமை பல் கலைக்கழகத்திற்கு உண்டு என அறி விக்கப்பட்டுள்ளது. பாலின சமத்து வத்தை உயர்த்திப் பிடித்து, எதிர்காலத் தலை முறையை வளர்த்தெடுப்போம். இவ்வாறு அவர் பேசினார். பி.ஆர்.நடராஜன் எம்.பி., கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், “தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக் கான பிரச்சனைகளில் மாதர் சங்கம் தலையீடு செய்கிறது. போராட்டங் களை உறுதியோடு வலுவாக நடத்துங் கள்; அனைத்து அடிமைச் சங்கிலிகளை யும் உடைத்தெறியும் பெரும் ஆயுதம் தான் போராட்டம். தற்போது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர். ஆனால், மோடியின் நெருங்கிய நண்ப ரான அதானி, அவரின் மேற்பார்வை யில் உள்ள குஜராத் துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிக்கப்படுகின் றன. இந்த போதைப் பொருட்களை எங்கு வைத்துள்ளனர் என்று தெரிய வில்லை. இவர்களால் எப்படி போதைக் கலாச்சாரம் ஒழியும்? பெண்களுக்கு எதி ரான கொடுமைகள் குறையும்? சட் டத்தை பாதுகாக்கின்ற இடத்தில் இருந்து கொண்டு சட்டம்-ஒழுங்கை சீர ழிக்கின்ற பணியை பாஜகவின் கைப்பா வைகளான ஆளுநர்கள் திட்டமிட்டு செய்து வருகின்றனர்”என்றார். இதேபோல சென்னை உள்பட பல் வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்வு களில் மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா உள்ளிட்ட நிர் வாகிகள் பங்கேற்றனர்.