சேலம், அக்.2- மகாத்மா காந்தியடிகளின் 154 ஆவது பிறந்தநாளான ஞாயிறன்று மதவெறியை மாய்த்து, மக்கள் ஒற் றுமையை காப்போம் என பல்வேறு அமைப்பினர் உறுதிமொழி ஏற்ற னர். சேலம் பழைய பேருந்து நிலை யத்தில் உள்ள மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதில், மதவெறியை மாய்ப்போம்; மக் கள் ஒற்றுமையை காப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந் நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் பி.செல்வசிங், மாவட்ட செய லாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஆர்.வெங்கடபதி, எம்.குண சேகரன், மேற்கு மாநகர செயலா ளர் எம்.கனகராஜ், வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன் குமார் உள் ளிட்ட தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சமூக நல்லிணக்க மேடை சார்பில் தருமபுரி எஸ்வி சாலையில் உள்ள மகாத்மா காந்தி உருவசிலைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சியில் சமூக நல்லிணக்க மேடை பொறுப்பாளர் ஆர்.சிசு பாலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, ஒன் றிய செயலாளர் என்.கந்தசாமி, தமு எகச மாவட்ட செயலாளர் சிங்கார வேல், விசிக மண்டல செயலாளர் பொ.மு.நந்தன், மாவட்ட துணை செயலாளர் மின்னல் சத்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் த.கு.பாண்டி யன், தொகுதி செயலாளர் சக்தி, முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில நிர்வாகி சாதிக் பாஷா, தேசிய முஸ்லீம் லீக் மாவட்ட துணைத் தலைவர் சீராஷ்புதின், அருட் தந்தை ஜேசுதாஸ், மக்கள் கண்கா ணிப்பக மாவட்ட அமைப்பாளர் செந்தில் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அரூரில் மகாத்மா காந்தியடி களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் ஏ.குமார், விசிக மாவட்ட செயலாளர் ஜானகிராமன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் நியாஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில, சிபிஎம் ஒன் றிய செயலாளர் பி.குமார், மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் இதயாத், அப்துல் இலியாஸ் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலு வலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். அதனைத்தொடர்ந்து காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் கதர் சிறப்புத் தள்ளுபடி விற்ப னையை தொடங்கி வைத்தார்.
கோவை
கோவை மாவட்டம், பொள்ளாச் சியின் மையப்பகுதியான கோவை ரோடு, நியூ ஸ்கீம் ரோடு சந்திப்பு பகுதியில் புதுப்பிக்கப்பட்ட காந்தி சிலை திறப்பு விழா காந்தி ஜெயந்தி நாளான ஞாயிறன்று நடைபெற் றது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், நக ராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், காவல் துணை கண் காணிப்பாளர் தீபசுஜிதா ஆகியோர் கலந்து கொண்டு, காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.