districts

img

குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள்  குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

மாற்றுத்திறனாளிகளுக்கு என தனித்துறை அமைத்திட வேண்டும் உதவி தொகையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கத்தினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறுத்து அவ்வமைப்பினர் கூறுகையில் 21 வகையாய் மாற்று திறனாளிகள் உள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 1000  ரூபாய் உதவி தொகையை கேரளா,தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவதை போல 3000 ரூபாயாக அதிகரித்து வழங்க வேண்டும் என்றனர்.மேலும் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் மாற்று திறனாளிகளை கவனித்து கொள்ள கடும் சிரமத்திற்கு உள்ளாவதால் இலவச வீடுகள் வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் உள்ளனரா என முறையான கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அரசு வேலை வாய்ப்பில் 3% உள்ளதை நான்கு சதவீதமாக உயர்த்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.நாற்பது சதவீதம் குறைபாடு இருந்தாலே உதவிகள் வழங்கிட வேண்டும் என சட்டம் உள்ளதாக தெரிவித்தனர்.தமிழக அரசு இன்றைய பட்ஜெட்டில் மாற்று திறனாளிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது எனவும் தனித்துறை அமைத்து மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பலன் அடைய வேண்டும் என்பதே நோக்கம் எனவும் தெரிவித்தனர். 
இப்போராட்டத்தில் 40க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.

;