districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க அமைப்பு தின விழா

ஈரோடு, மே 9- தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் அமைப்பு தினம் ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத் தின் 58 ஆவது அமைப்பு தின விழா, ஈரோடு சங்க அலு வலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் செயலாளர் சங்க ரன் தலைமை வகித்தார். தலைவர் சுரேஷ் பாபு சங்கக் கொடி யினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலா ளர் நாராயணசுவாமி சிறப்புரையாற்றினார். முன்னதாக ரத்ததான முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்று ரத்ததானம்  வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில், சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கே.எம்.ஆர்.கார்த்திகேயன், பொருளாளர் தா.கோபிநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நாமக்கல்: ‘பல்லாங்குழி’ சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

நாமக்கல், மே 9- பள்ளிபாளையத்தில் சங்ககிரி செல்லும் சாலை குண்டும்,  குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதி க்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ், சாலை விரி வாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த  இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின் றன. மேம்பாலப் பணிகள் காரணமாக பல்வேறு போக்கு வரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, வாகனங்கள் சென்று  வருகின்றன. இந்நிலையில், பள்ளிபாளையம் சங்ககிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட முக்கிய ஊர்களை இணைக் கும் பள்ளிபாளையம் நால்ரோடு பகுதி அருகே தற்போது, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகி றது. இதனால் திருச்செங்கோட்டிற்கு காவிரி ஆற்றில் இருந்து  கொண்டு செல்ல பயன்படும் குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், குடிநீர் வீணாக வெளியேறி வருகி றது. கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து, பிர தான சாலை முழுவதும் குடிநீர் தேங்கி நிற்கிறது. மேலும்,  சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியின் காரணமாக சாக்கடையில் இருந்து வெளியேறும் நீரும் ஒன்றாக கலந்து  குளம் போல் காட்சியளிப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீர் அதிக ளவு தேங்கி நிற்பதால் சாலைகள் குண்டும், குழியுமாக  காட்சியளிக்கின்றன. இதனால் இரவு நேரத்தில் வரும்  இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளா கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. எனவே, குடிநீர்  குழாயை விரைந்து சரி செய்து, ‘பல்லாங்குழி’ சாலைக ளாக காட்சியளிக்கும் தார்ச்சாலையை செப்பனிட வேண்டும்  என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

தருமபுரி, மே 9- ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தை நவீனமயப்படுத்தும் பணி மற்றும்  பராமரிப்பு பணியின் காரணமாக, இரண்டு மாதங்களாக காவிரியில் பரிசல் இயக்குவதற்கு விதிக்கப் பட்ட தடை வியாழனன்று முதல் நீக் கப்பட்டதை அடுத்து, காவிரி ஆற்றில்  பரிசல் இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்  அருவி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற் கொண்டு, அருவிகள், பாறை குகை கள், காவிரி ஆற்றின் அழகை கண்டு  ரசிப்பதை வாடிக்கையாகக் கொண் டுள்ளனர். கடந்த சில மாதங்களாக  நீர்பிடிப்புப் பகுதியில் மழை யின்மை, கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு முற்றிலும் குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினா டிக்கு 200 கன அடியாக இருந்து  வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை நவீன முறையில் மேம்ப டுத்தும் வகையில் கட்டடப் பணிகள்  நடைபெற்று வருகிறது. பரிசல் துறை  பகுதியில் பரிசல் நிறுத்துவதற்கான இடம் மற்றும் நடைபாதை பணிகள்  நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணியின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்  பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம்  தற்காலிகமாக தடை விதித்திருந்தது. இருப்பினும் ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்துவிட்டு பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத் துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், தற்போது இரு  மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதிக ளில் அவ்வப்போது கனமழை பெய்து  வருகிறது. மேலும் தமிழகத்தில் திடீரென பெய்து வரும் கோடை மழையின் காரணமாக ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்ப டுகிறது. இதையடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒகேனக்கல்  காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வா கம் அனுமதி அளித்துள்ளது. பரிசல் கள் இயக்க அனுமதி அளிக்கப் பட்ட நிலையில், வியாழனன்று ஒகே னக்கல் வந்திருந்த சுற்றுலாப் பய ணிகள் பரிசல் பயணம் செய்ய அனு மதி அளிக்கப்பட்டுள்ளதை அறிந்து, பரிசல் துறை பகுதியில் குவிந்தனர். பின்னர் மாமரத்துக்கடவுள் பரிசல்  துறையில் இருந்து தொம்பச்சிக்கல், பெரியபாணி வழியாக உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனர். 

பொள்ளாச்சியில் ’கல்லூரிக் கனவு’ நிகழ்வு

பொள்ளாச்சி, மே 9- பொள்ளாச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் மேற்ப டிப்பிற்காக நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்லூரி கனவு 2024 நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற  மாணவ, மாணவியருக்கான உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த வழிகாட்டுதலுக்காக, நான் முதல்வன் கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சி பொள்ளாச்சியில் மகாலிங் கம் பொறியியல் கல்லூரியில், வியாழனன்று நடைபெற் றது. இந்நிகழ்விற்க்கு மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,  சார் ஆட்சியர் அ.கேத்தரின் சரண்யா, ஆனைமலை வட்டார  காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, பொள்ளாச்சி மகா லிங்கம் பொறியியல் கல்லூரியின் செயலாளர் ராமசாமி மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் பல்கலைக்கழக உயர்  அதிகாரிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

நீலகிரிஸ் டெர்பி குதிரை பந்தயத்துக்கு ரூ.77 லட்சம் பரிசுத்தொகை

நீலகிரிஸ் டெர்பி குதிரை பந்தயத்துக்கு ரூ.77 லட்சம் பரிசுத்தொகை உதகை, மே 9- உதகையில் வரும் மே 12 ஆம் தேதியன்று நடைபெற உள்ள ‘நீலகிரிஸ் டெர்பி’ குதிரை பந்தயத்துக்கு ரூ.77 லட்சம்  பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசனை முன் னிட்டு, மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு 137 ஆவது குதிரை பந்த யம் ஏப்.6 ஆம் தேதியன்று தொடங்கியது. இதற்காக பெங்க ளூரு, பூனா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500  பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முக்கிய போட்டியான ‘நீலகிரிஸ் டெர்பி’ மே 12 ஆம் தேதியன்று நடை பெறள்ளது. இதற்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி வியாழ னன்று உதகை குதிரை பந்தய மைதானத்தில் நடை பெற்றது. அப்போது மெட்ராஸ் ரேஸ் கிளப் செயலாளர் தர்ம பிரசாத் கூறுகையில், நீலகிரிஸ் டெர்பி போட்டியில் 11 குதி ரைகள் பங்கேற்கின்றன. இப்போட்டிக்கு பரிசு தொகை யாக ரூ.77 லட்சம் ஆகும். வெற்றி பெறும் குதிரையின் உரி மையாளருக்கு கோப்பை மற்றும் ரூ.38 லட்சத்து 11 ஆயி ரத்து 500, பயிற்சியாளருக்கு ரூ.4 லட்சத்து 62 ஆயிரம், ஜாக் கிக்கு ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 500 வழங்கப்படும். இரண் டாம் இடம் பிடிக்கும் குதிரைக்கு ரூ.14 லட்சத்து 61 ஆயி ரத்து 75, மூன்றாம் இடம் பிடிக்கும் குதிரைக்கு ரூ.6 லட்சத்து  35 ஆயிரம் மற்றும் நான்காம் இடம் பிடிக்கும் குதிரைக்கு ரூ.3  லட்சத்து 17 ஆயிரம் வழங்கப்படும், என்றார்.

இங்கிலாந்து செல்லும் ஏற்காடு பழங்குடியின மாணவி

சேலம், மே 9- இங்கிலாந்து பயணம் மேற்கொள் ளவுள்ள மாணவர்கள் இடம்பெற் றுள்ள ஏற்காட்டைச் சேர்ந்த பழங்குடி யின மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சேலம் பெரியார் பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்லூரிகளில் வேலைவாய்ப்பு சார்ந்த பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்ஒரு பகுதியாக ‘ஸ்கெளட்’ எனும் திட்டத் தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து  சிறந்த 10 மாணவர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள  டர்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்பட வுள்ளனர். இக்குழுவில் பெரியார் பல் கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற  சேலம் அரசு இருபாலர் கலைக்கல் லூரி மாணவர் மிதுனராஜன், நாமக் கல் மாவட்டம், வெப்படை பான் சேக் கர்ஸ் கல்லூரி மாணவி ஹேமா ஆகி யோர் தேர்வாகி உள்ளனர். மாணவி ஹேமா, ஏற்காடு வாழவந்தியைச் சோ்ந்த பழங்குடியின மாணவி என் பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வரும் ஜூன் 9 ஆம் தேதி முதல் 16 ஆம்  தேதி வரை இங்கிலாந்து டர்ஹாம் பல் கலைக்கழகத்தில் தங்கி பயிற்சி பெற  உள்ளனர். இதற்கான விமானக் கட்ட ணம், விசா நடைமுறை, தங்குமிடம் மற்றும் பயிற்சி சம்பந்தமான அனைத் துச் செலவுகளையும் தமிழக அரசு ஏற் றுக் கொள்கிறது.  இந்நிலையில், இங்கிலாந்து செல்ல தேர்வாகியுள்ள மாணவர் களை பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நி கழ்வில், நான் முதல்வன் திட்ட இயக் குநர் திருமூா்த்தி, மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் ரமேஷ், சேதுராடஜ் குமார், சம்பத், பாலமுருகன், பான்  சேக்கர்ஸ் கல்லூரி முதல்வர் மார்க ரெட் டெய்சி, அரசு கலைக்கல்லூரி திட்ட ஒருங்கிணைப்பாளர் அகி லாண்டேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொல்லிமலையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய உத்தரவு

கொல்லிமலையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய உத்தரவு நாமக்கல், மே 9- கொல்லிமலையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், லாரி கள் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யுமாறு அதி காரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ச.உமா உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதி கரித்துள்ளதால், ஒரு சில பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப் பாடு நிலவுகிறது. அதற்கான மாற்று ஏற்பாடுகளை ஊரக  வளர்ச்சித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். பெரும் பாலான இடங்களில் காவிரி குடிநீர் விநியோகம் இருப்பதால் தட்டுப்பாடு என்பது இல்லை. கொல்லிமலையில் உள்ள 14  ஊராட்சிகளுக்கு போதுமான குடிநீர் வசதியில்லாததால் லாரி கள் மூலம் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சி யர் ச.உமா கூறுகையில், மாவட்டத்தில், ஊரகப் பகுதிக ளில் 322 ஊராட்சிகளில், கொல்லிமலையைத் தவிர்த்து மற்ற  அனைத்து ஊராட்சிகளிலும் காவிரி குடிநீர் விநியோகம் உள்ளது. அதுபோல, நகராட்சிகளில் ராசிபுரம் தவிர்த்து மீத முள்ள நான்கு நகராட்சிகளிலும் காவிரி ஆற்றில் இருந்து குடி நீரை பயன்பாட்டுக்கு எடுக்கின்றனர். பேரூராட்சிகள் அனைத் தும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் உள்ளன. ஒவ்வொரு உள் ளாட்சிகளிலும் இருப்பில் உள்ள நிதியை கொண்டு குடிநீர்  பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள  உத்தரவிட்டுள்ளோம். காவிரி ஆற்றில் இருந்து மின் மோட் டார் மூலம் தண்ணீர் எடுப்பதைத் தடை செய்துள்ளோம். கொல்லிமலையில் காவிரி குடிநீருக்கு வாய்ப்பு இல்லாத தால் அங்குள்ள 14 ஊராட்சிகளுக்கும் மாற்று ஏற்பாடாக லாரி கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது, என்றார். இதுகுறித்து கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவ லர் சரவணன் கூறுகையில், திருப்புளி நாடு, பைல் நாடு,  பெரக்கரை நாடு ஆகிய ஊராட்சிகளில் இருந்து மற்ற பகுதிக ளுக்கு புதன்கிழமை முதல் லாரிகள் மூலம் குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த ஊராட்சி தலைவர் வசம்  இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீராதாரம்  உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அங்கிருந்து லாரிகளில் ஏற் றப்பட்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது, என்றார்.