districts

img

மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க குடும்ப ஒருங்கிணைப்பு விழா

ஈரோடு, செப்.26- தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க  குடும்ப ஒருங்கிணைப்பு விழா ஞாயிறன்று திண்டல், சீமா  அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைவர் செ.சுரேஷ் பாபு தலைமை வகித்தார். செயலாளர் மு.சங்கரன் வரவேற் றார். மாநிலத் தலைவர் பி.சத்தியநாராயணன் சிறப்புரை யாற்றினார். தமுஎகச மாவட்ட துணைத்தலைவர் சரிதா ஜோ  கதை சொன்னார். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடும் பத்தினர் அனைவரும் பங்கேற்ற ஆட்டம், பாட்டம், கதை,  கவிதை, பந்தாட்டம் போன்ற விளையாட்டு, ரங்கோலி உள் ளிட்ட கோலம், சமையல் போட்டிகள் மற்றும் பல்வேறு அனுபவப் பகிர்வுகள் இடம் பெற்றன. இதில் சிஐடியு மாவட் டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், துணைத்தலைவர்கள் ஆர். ரகுராமன், என்.முருகையா, செயலாளர் எச்.ஸ்ரீராம் மற்றும் பி.சுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்க பொருளா ளர் டி.கோபிநாத் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். முடிவில், இணைச்செயலாளர் பி.கவின்குமார் நன்றி கூறினார்.