தாராபுரம், மே 24- தாராபுரம் அருகே உள்ள அர பிந்தோ சிபிஎஸ்சி பள்ளியில் இந்து மத அமைப்புகளின் பயிற்சி முகாம் நடை பெறுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திராவி டர் கழகம் சார்பில் வட்டாட்சியர் அலு வலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் சண்முகம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத் தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதாவது, தாராபுரம் - அலங்கியம் சாலையில் செயல்பட்டு வரும் அரபிந்தோ சிபி எஸ்சி பள்ளியில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதத்தீவிரவாத அமைப்புக ளின் சார்பில் பயிற்சி முகாம் என்ற பெயரில் சமூக அமைதியை சீர்குலைக் கும் வகையில் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் இளைஞர்களையும், சிறார்களையும் சேர்த்து பயிற்சி வழங் கப்பட்டு வருகிறது. இது எதிர்காலத் தில் மிகப்பெரிய மதக்கலவரத்தை தூண் டும் செயலாக அமையும். இது தொடர்ந் தால் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் பல்வேறு சமூக மக்களின் அமைதி யும், இணக்கமும் கெடுவதோடு, அமைதியின்மை காரணமாக தாராபு ரத்தில் தொழில் வளர்ச்சியும் கடுமை யாக பாதிக்கப்படும். இதுபோன்ற சமூக அமைதியை குலைக்கும் வகையில் நடத்தப்படும் பயிற்சி முகாமை உடனடியாக தடை செய்ய வேண்டும். மேலும், பல்வேறு தரப்பு மாணவர்களும் பயிலும் சூழ லில் ஒரு குறிப்பிட்ட மத அமைப்பின் சார்பில் பயிற்சி முகாம் நடத்த அனும தியளித்த அரபிந்தோ பள்ளி நிர்வாகத் தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து கட்சிகளையும் ஒன்றி ணைத்து பள்ளி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அதில் கூறப்படுட்டுள்ளது. முன்னதாக, இந்த மனுவை விடு தலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் தமிழ்முத்து, திராவிடர் கழக நிர்வாகி அழகப்பன் ஆகியோர் அளித் தனர்.