திருப்பூர், அக். 9 - சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறு வனங்களுக்கு மின்வாரியத்தின் மூலம் உயர்த்தப்பட்ட நிலை கட்ட ணம் மற்றும் உச்ச நேர பயன்பாட்டுக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி திருப்பூரில் நூற்றுக்கணக்கான தொழில் முனைவோர் பல்வேறு சங்கங்களின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் என்ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு பகு திகளில் உள்ள நடுத்தர, சிறு, குறு தொழில் துறையினர் ஒன்றிணைந்து மின் கட்டண உயர்வை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக பல்லடம் அருகே காரணம்பேட்டை மற்றும் மதுரையில் மாபெரும் உண் ணாவிரதம் நடத்தினர். மின் கட்ட ணத்தைக் குறைக்கக் கோரி அஞ்சல் கடிதம் அனுப்பும் போராட்டம் நடத் தினர். இதன் அடுத்த கட்டமாக தொழிற்சாலைகளில் கறுப்புக் கொடி ஏற்றி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங் களில் கோரிக்கை மனு அளிப்பது என்றும் தீர்மானித்தனர். அதன்படி திங்களன்று திருப்பூ ரில் உள்ள தொழில் துறை மின்நுகர் வோர் கூட்டமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
திருப்பூரில் ஆங்காங்கே தொழில் நிறுவனங்களில் கறுப்புக் கொடிகள் ஏற்றி வைத்திருந்தனர். சைமா பொதுச் செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம், நிட்மா சார்பில் கோபி, ராஜாமணி, பிரிண்டிங் சங்கம் சார்பில் ஸ்ரீகாந்த் உள்பட பல்வேறு சிறு, குறு தொழில் அமைப்புகளைச் சேர்ந்தோர் சுமார் ஐநூறு பேர் பல்லடம் சாலை ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத் திற்கு முன்பிருந்து ஊர்வலமாக மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்தனர். நுழைவாயிலில் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். எனினும் கோரிக்கை மனு அளிக்க இருப்பவர்களை மட் டும் அனுமதிப்பதாகக் கூறி, ஒவ்வொ ருவராக ஆய்வு செய்து உள்ளே அனுப்பினர். மாவட்ட ஆட்சியரக குறைதீர்க் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் நேரடியாக அறைக்கு வெளியே வந்து, தொழில் துறையினரை சந்தித்து கோரிக்கை மனுவைப் பெற்றார். இங்கிருக்கும் தொழில் நிலைமைகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்பதாக ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் உறுதியளித்தார் என்று சைமா பொதுச் செயலாளர் கீதாஞ் சலி கோவிந்தப்பன் தெரிவித்தார். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும், அடுத்த கட்டமாக வரும் 18ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து தொழில் துறையினர் உண் ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.