தருமபுரி, ஆக.6- கடத்தூர் அருகே கோவிலில் படித்து வரும் பள்ளி குழந்தைகளுக்கு, புதிய கட்ட டம் கட்டித்தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் செவ்வாயன்று ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர். அம்மனுவில், தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியத்திற்குபட்ட வீரகவுண்டனூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின் றனர். இக்கிராமத்தில் அரசு உள்ள தொடக்கப் பள்ளியில் ஏராளமானோர் கல்வி பயின்று வரு கின்றனர். இந்நிலையில், பள்ளி கட்டடம் பழமையானதால், இடிந்து விடும் நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளி மாணவ, மாணவி களின் பாதுகாப்பு கருதி, பள்ளியின் சமை யல் கூடத்தில் வைத்து பாடம் கற்பிக்கப் பட்டுள்ளது. பழைய கட்டடத்தை புதுப்பிப் பதற்காக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது, சமையல் கூடத்தில் ஆபத்தான நிலையில் பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது பள்ளி கல்வித் துறைக்கு தெரிய வரவே, 25க்கும் மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதனிடையே, விசேச காலங்களில் கோவிலுக்கு வரும் பொதுமக்களால் கல்வி கற்பிப்பதில் இடையூறு ஏற்படுகிறது. எனவே, புதிய கட்டடம் கட்டிக்கொடுக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.