தாராபுரம், ஜூலை 13- தாராபுரம் அடுத்த சின்னப்புத்தூர் மற்றும் மோளரப்பட்டி ஊராட்சி பகுதியில் செயல்படும் தனியார் கோழிப்பண்ணையை மூடக் கோரி அப்பகுதி பொதுமக்கள் கோட்டாட்சி யரிடம் மனு அளித்துள்ளனர். சின்னப்புத்தூர் ஊராட்சிக் குட்பட்ட கெத்தல்ரேவ், கோவிந்தா புரம், தும்பநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், நஞ்சுண்டாபுரம், காளிபாளையம், புளியமரத்துப்பா ளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள் ளன. இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் சுமார் 4 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அப் பகுதியைச் சுற்றி ஏராளமான தனியார் கோழிப் பண்ணைகள் புற்றீசல் போல முளைக்கத் தொடங்கி உள்ளது. இதில் இருந்து வெளியேறும் ஈக்கள் தொல்லை நாளுக்கு நாள் பெருகி பொதுமக்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்படையச் செய்து வருகிறது.மேலும் சின்ன புத்தூர் கிராமத்தில் நஞ்சுண்ட புரத்தில் இருந்து புளியம ரத்துப் பாளையம் செல்லும் சாலை யில் சன் பவுல்டரி பார்மஸ், எஸ்.கே. எம்.சபரீஸ் உள்ளிட்ட ஏராளமான தனி யாருக்குச் சொந்தமான முட்டை கோழிப் பண்ணை செயல்பட்டு வருகி றது. இதில் இருந்து ஏராளமான ஈக் கள் வெளியேறி வருகிறது. இந்த கோழிப் பண்ணையில் உற்பத்தியா கும் ஈக்கள் அருகிலுள்ள கிராமம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. இத னால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோழிப் பண்ணை அமைக்க மத்திய அரசு வழிகாட்டுதலின்படி குடியிருப்பு பகு தியில் 500 மீட்டர் இடைவெளியிலும், நீர்நிலை கிணறு போன்றவற்றிற்கு 100 மீட்டர் அப்பாலும், மாநில தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டாருக்கு அப்பாலும், பஞ்சா யத்துச் சாலைகள் 15 மீட்டர் அப்பா லும் கோழிப் பண்ணைகள் அமைக்க வேண்டும் என்பது விதி முறைகள் நடைமுறையில் உள்ளது.
ஆனால் இவற்றையெல்லாம் காற்றில் பறக்க விட்டு தனியார் கோழிப் பண்ணை நிர்வாகம் தொடர்ந்து நடத்தி வருகின் றனர். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோழிப் பண்ணை ஈக்கள் தொல்லையால் நிம் மதியாகத் தூங்கவோ, சாப்பிடவோ முடியவில்லை. டீ கூட நிம்மதியாகக் குடிக்கக் கூட முடியவில்லை. வீடுக ளில் எங்குப் பார்த்தாலும் ஈக்கள் சூழ்ந்து கொள்கிறது . ஆடு மாடுக ளுக்குத் தண்ணீர் ஊற்றி வைத்தால் மேற்பரப்பு முழுவதும் ஈக்கள் விழுந்து செத்து மிதக்கிறது. அந்த தண்ணீரைக் கால்நடைகள் குடிப் பதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருகிறது. எனவே சின்னபுத்தூர் கிராமத்தைச் சுற்றி உரிய அனுமதி யின்றி விதிமுறைகளை மீறி இயங் கும் கோழிப் பண்ணைகளை மூட உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டு மெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சின்னக்காம்பா ளையம் பேரூராட்சி பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாகச் செயல் பட்டு வரும் தனியார் கோழிப் பண் ணையால் சின்னக்காம்பாளைத்தை சுற்றியுள்ள சின்னக்கம்பாளையம், பஞ்சப்பட்டி, ரெட்டிபாளையம், சென் னாக்கல்பாளையம், சீலநாயக்கன் பட்டி உள்ளிட்ட பகுதியில் ஈ தொல்லை குறித்து 50க்கும் மேற்பட் டோர் ஒன்றிய கவுன்சிலர் தெய்வசி காமணி தலைமையில் கோட்டாட்சி யர் குமரேசனிடம் மனு அளித்தனர். இரண்டு பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் குமரேசன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். ஈ தொல்லை குறித்து இரண்டு பகுதி பொதுமக்கள் ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட் டது.