பொள்ளாச்சி, அக்.3- தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களி லும் மாற்றுத் திறனாளிகள் வந்துசெல்லும் வகையில் சாய்வு தளம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். இதுதொடர்பாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பொள் ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம் அளித்துள்ள மனு வில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் அரசு அலுவல கங்களில் மாற்றுத்திறனாளிகள் தங்குதடையின்றி வந்து செல் வதற்கு ஏதுவாக சாய்வு தளங்கள் அமைக்க வேண்டும். மேலும், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பிடம் வசதி அமைத்து தர வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட் டது. முன்னதாக சார் ஆட்சியரிடம் மனு அளிக்கையில், சங்கத் தின் பொள்ளாச்சி தாலுகா தலைவர் மா.பாலசுப்ரமணியம், தபெதிக பிரகாசு, பாலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.