districts

img

அடிப்படை வசதிகள் கேட்டு மலைவாழ் மக்கள் மனு

தருமபுரி, பிப்.5- பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட மலை கிரா மங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி  தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக் கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றி யத்திற்குட்பட்டது பிக்கலி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குபட்ட பெரியூர், பூதிநத்தம், குட் டக்கோசம்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில்  மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக, பூதிநத்தம் கிரா மத்தில் இருந்து சங்கிலி நத்தம் வரை உள்ள  தார்ச்சாலை குண்டும், குழியுமாக உள்ளது.  சங்கிலி நத்ததிலிருந்து தட்டப்பள்ளம் வரை உள்ள மண் சாலை, முட்டைகோசம் பள்ளம் முதல் சின்னக்குட்டி கொட்டாய் வரை உள்ள மண் சாலை, சங்கிலிநத்ததிலிருந்து ஆணையிட்டு மாரியம்மன் கோயில் வரை  செல்லும் மண்சாலை, குரும்பர் கொட்டாய் வரை செல்லும் மண்சாலை ஆகியவற்றை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும். பூதிநத் தம் - சங்கிலி நத்தம் சாலையின் குறுக்கே  நொண்டிக்கால் ஓடையின் குறுக்கே சிறு பாலம் அமைக்க வேண்டும். பூதிநத்தம் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குட் டகோசப்பள்ளம் பகுதிக்கு குழாய் அமைத்து,  குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். சங் கிலி நத்தம், தட்டப்பள்ளம் பகுதியில் வசிக் கும் இருளர் பழங்குடி மக்களுக்கு இலவச  மனைப்பட்டா, ரேசன் கார்டு வழங்க வேண் டும். தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வச திகள் செய்து தர வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி மலைவாழ் மக்கள் மாவட்ட  ஆட்சியரிடம் மனு அளித்தனர்.