தருமபுரி, ஜன.22- குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி செம்மனூர் அருந்தியர் இன மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி யிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட் டம், செம்மனூர் காலனியில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே கூலி தொழிலாளர்கள். இப் பகுதியில் ஒரு குழாய் மூலம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே குடிநீர் வழங் கப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையி னால் இப்பகுதி பெண்கள் அருகில் உள்ள விவசாய கிணறு, போர்வெல் போன்ற இடங் களில் ஒரு கிலோ மீட்டர் வரை நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் பள்ளிக்குழந்தைகள் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, நிரந்தரமாக குடிநீர் கிடைக்க இப்பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்ப குதி மக்கள் தருமபுரி ஆட்சியர் கி.சாந்தியி டம் மனு அளித்தனர்.