districts

img

ஆழியார் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி

கோவை, மார்ச் 29- பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை யில் இருந்து விவசாய நில பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங் கப்பட்டுள்ளதால் விவசாயி கள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்தாண்டு பெய்த பருவ மழை யால் 120 அடி கொண்ட ஆழியார் அணைக்கு  தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததுடன், டிசம்பர் மாதம் வரை அணையின் நீர்மட்டம்  110 அடிக்கும் அதிகமாக இருந்தது. அதன் பின், மழை குறைவாக இருந்தாலும், அணைக்கு விநாடிக்கு 350 கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது, அணையின் நீர்மட்டம் 58  அடியாக சரிந்துள்ளது. இதனால், அணை யின் பெரும்பகுதி மணல் மேடுகளாகவும், சேறும், சகதியுமாகவும், பாறைகள் நிறைந்த  இடமாக காட்டசியளிக்கிறது.

அடுத்து கோடை மழைக்கு பிறகுதான் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது என்ற நிலை உள்ளது.  இதற்கிடையே, ஆழியார் அணை வற்றிய நிலையில் இருப்பதால், அணையில் தண்ணீர்  இல்லாத பகுதியில், தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விவசாய பயன்பாட் டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.  இது குறித்து பொதுப்பணித்துறை அதி காரிகள் கூறுகையில், ‘கோவை மாவட் டத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட் டிலும், பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டிலும் நீர்நிலைகளான அணை மற்றும் ஏரி, குளங்களில் கோடையின்போது, தூர் வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் உள்ள வண்டல் மண் விவ சாய பயன்பாட்டிற்காக இலவசமாக வழங்க  அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, ஆழியார் அணை மற்றும் குளப் பத்துக்குளத்தில் இலவசமாக வண்டல் மண் எடுக்க, அதற்கான விண்ணப்பத்தை ஆனை மலை தாலுகா அலுவலகத்தில் பெற்ற,  கிராம நிர்வாக அலுவலரிடம் நில உரிமைச் சான்று பெற்று தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதில், வறண்ட நஞ்சை நிலம் என்றால் ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கன மீட்டருக்கும் மிகாமல் வண்டல் மண்  எடுத்து கொள்ளலாம். விவசாயிகளே வாக னங்களை கொண்டுவந்து, விவசாய நிலத் துக்கு வண்டல் மண் இலவசமாக எடுத்து பயன்பெறலாம்’ என்றனர்.