கோபிசெட்டிபாளையம், அக்.20- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையை தூர்வார வும், விவசாயிகள் வண்டல் மண் எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனப் பகுதிக்குட்பட்ட பகுதியில் குண்டேரிப்பள் ளம் அணை அமைந்துள்ளது. 42 அடி உயரம் கொண்ட இந்த மண் அணையின் மூலம் வலது, இடது கரை வாய்க்கால் பாசனத் தில் 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக வும், 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் மறை முகமாகவும், ஆழ்துளை கிணறுகளின் நிலத் தடி நீர் மட்டம் உயர முக்கிய பங்கு வகிக் கிறது. இதுதவிர வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் அணையாகவும் விளங்கி வருகிறது. அணையில் தற்போது 10 அடிக்கும் மேல் சேறும், சகதியும் நிறைந்து காணப்படுவதால், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீரால் அடிக்கடி அணை நிரம்பி உபரிநீர் பவானிஆற்றில் சென்று வீணாகி வருகிறது. அணையில் உபரிநீர் வெளியேறி, ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்படும்போதெல்லாம் அணையை தூர்வாரவும், விவசாயிகள் வண் டல் மண் எடுக்க அனுமதி வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கை ஏற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற் கொண்டு, குண்டேரிப்பள்ளம் அணையில் விவசாயிகள் நிபந்தனைகள் அடிப்படையில் தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. இதைத்தொடர்ந்து குண்டேரிப் பள்ளம் அணையில் வெள்ளியன்று பொதுப் பணித்துறையினர், வனத்துறையினர் முன்னி லையில் விவசாயிகள், பொதுமக்கள், வண் டல் மண் எடுப்பதற்கான நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலை வர் நவமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் டி.கே.சுப்பிரமணி, டி.என்.பாளையம் ஒன் றியச் செயலாளர் சிவபாலன், டி.என்.பாளை யம் பேரூர் செயலாளர் சேகர் (எ) பழனிச்சாமி, மாவட்டப் பொருளாளர் ஜம்பு (எ) கே.கே.சண் முகம், வாணிப்புதூர் பேரூராட்சி மன்ற தலை வர் சிவராஜ், பெரியகொடிவேரி பேரூராட்சி மன்ற தலைவர் தமிழ்மகன் சிவா, குப்புராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.