districts

img

விதிமுறைகளை மீறி பாசன கால்வாய்களின் குறுக்கே பாலம் மற்றும் சாலைகள் அமைக்க அனுமதி

உடுமலை, டிச.2- குடிமங்கலம் பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்கள் மீது ரியல் எஸ்டேட் உரிமை யாளர்கள் விதிமுறைகளை மீறி பாலங்கள் மற்றும் சாலைகள் அமைத்து உள்ளனர். இதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை, குடிமங்கலம் பகுதியில் பரம் பிக்குளம் பாசனத் திட்டத்தின் படியும், மடத் துக்குளம் பகுதியில் அமராவதி அணையின் பாசன கால்வாய்கள் மூலமும் தண்ணீர் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த  திட்டத்தின் படி அணையில் இருந்து முதன்மை கால்வாய் முதல் கடைக்கோடி விவசாயிகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்ல அரணி வாய்க்கால்கள் பொதுப்ப ணித்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கால்வாய்களில் பராமரிப்பு வேலை கள் செய்ய  வேண்டும் என்றால் முறையாக அனுமதி பெற வேண்டும். இப்படி பல கட்டுப் பாடுகள் கொண்ட கால்வாய்கள் முறையான  பராமரிப்பு இல்லாமல் உள்ளன. மேலும்,  பொதுப்பணித்துறையினரின் கவனக்குறை வால் பல இடங்களில் கால்வாய்கள் வரைப டத்தில் மட்டுமே உள்ளது. இந்நிலையில், இப் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அதிகரித் துள்ளதால், விவசாய நிலங்கள் வீட்டுமனை யாக மாறி வருகிறது. வீட்டுமனைகளுக்கு செல்ல முதன்மை கால்வாய்களின் குறுக்கே  கனரக வாகனங்கள் செல்லும் வகையில் பாலங்கள் மற்றும் கால்வாய்களின் கரைக ளில் சாலைகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த  பாலங்கள் கட்ட பொதுப்பணித்துறையினர் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கினார் கள் என்று தெரியவில்லை. ஆனால் சிறிய கால்வாய்களின் இடையே விவசாயிகள் பாசன குழாய் மற்றும் மின்கம்பங்கள் கொண்டு செல்ல அனுமதி உண்டு என்ற விதி  இருந்தும், விவசாயிகளிடம் சில அதிகாரிகள்  பொதுப்பணித்துறையின் தடையில்லா  சான்று கேட்கின்றனர். ஆனால் கால்வாய்க ளின் மீது யார் கொடுத்த அனுமதியில் பாலங் கள் கட்டப்படுகிறது என்று தெரியவில்லை. பொதுப்பணித்துறையின் அதிகாரிகளால் இப்பகுதியில் இருக்கும் கால்வாய்கள் அழி யும் நிலையில் உள்ளன. எனவே மாவட்ட நிர் வாகம் உடனடியாக கால்வாய்களை ஆய்வு  செய்து தவறு செய்த அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.