districts

img

மாணவர்கள் உரிமையை பறிக்கும் பெரியார் பல்கலை.,

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழகத்தில் ஊழல், முறைகேடுகள், பாலியல் அத்து மீறல்கள், மாணவர் விரோத போக்கு, தொலைதூர கல்விக்கு அனுமதியின்மை போன்ற செயல் களை மூடி மறைப்பதற்காக இத்த கைய நடவடிக்கையை மேற் கொண்டுள்ளதாக இந்திய மாண வர் சங்கம் கருதுகிறது. மாணவர் நலன் மற்றும் உரிமைக்காகப் போராடி வரக்கூடிய இந்திய மாண வர் சங்கம் போன்ற ஜனநாயக அமைப்புகளின் குரல்வளைகளை நசுக்கும் விதமான இச்சுற்றறிக்கை அமைந்துள்ளது. குறிப்பாக அரசி யல் அமைப்பு சட்டம் பிரிவு 19ன்படி  சங்கம் சேரும் உரிமை, பேச்சு மற் றும் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை, இயக்கம் நடத்துதல், பரப்புரை செய்தல் போன்ற பல்வேறு ஜனநாயக உரி மைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பெரியார் பல்கலைக்கழ கம் இதை தடைசெய்வதாக அறி வித்திருப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்.  எனவே, இப்பிரச்சனை தொடர் பாக தமிழக முதல்வரும், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும். இச்சுற்ற றிக்கையை அனுப்பிய பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் பதிவா ளர் மீது உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு இந் திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநில நிர்வாகிகள் என்.தேன்மொழி, டி. சரவணன், மாவட்ட தலைவர் எஸ். பவித்ரன், உத்தம் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்பின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உத வியாளர் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை குற்றச்சாட்டு

சேலம், ஜூன் 2- மாணவர்கள் உரிமையை பறிக் கும், மக்களாட்சி மாண்புகளுக்கு எதி ரான பெரியார் பல்கலைக்கழகச் சுற்ற றிக்கையை திரும்பப்பெற வேண்டும் என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தியுள்ளது. கடந்த மே 25 ஆம் தேதியன்று பெரி யார் பல்கலைக்கழக பதிவாளர், பல்க லைக்கழகத்தின் அனைத்துத் துறை களுக்கும், கல்லூரிகளுக்கும் துணை வேந்தரின் ஆணையாக ஒரு சுற்ற றிக்கை அனுப்பியுள்ளார். அதில், பல் கலைக்கழக, கல்லூரி வளாகங்களில்  பயிலும் மாணவர்கள் பல்வேறு  அமைப்புகள் பெயரில் அரசியல்  சார்ந்த பரப்புரைகளை மேற்கொள்வ தாகவும், இதைதவிர்க்க மாணவர்க ளுக்கு அறிவுறுத்தி, பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்கள் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பானது என்பதை உறுதிசெய்திட உரிய நடவ டிக்கை மேற்கொள்ள துறைத் தலை வர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலா ளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பெரி யார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பெயரில் வந்துள்ள சுற்ற றிக்கை மக்களாட்சி மாண்புகளுக்கு முற்றிலும் எதிரானது. மாணவர்கள்  அரசியல் பேசினால் கல்லூரி வளாகம் பாதுகாப்பாக இருக்காது என்ற கருத் தாக்கம் மிகவும் தவறானது. கல்லூரி யில் அரசியல் விவாதம் நடந்தால்,  மாணவர்கள் அரசியல் விவாதத்தில்  ஈடுபட்டால் அவர்கள் படிப்பு பாதிக் கப்படும்; அவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற அச்ச உணர்வை பெற்றோர்களுக்கு ஏற்படுத்தும் முயற் சியாகவே இந்த சுற்றறிக்கையை பார்க்க வேண்டி உள்ளது. அரசியல் பேசினால் பாதுகாப்பு இருக்காது என்றால், இந்தியாவில் சட்டம் ஒழுங்கு அந்த அளவு சீர்கெட்டு உள்ளதா? மாற்றுக்கருத்திற்கு இங்கு இடமில்லையா? இந்திய ஜனநாயகம் கடந்த 75 ஆண்டுக்காலம் இல்லாத அளவு தற்போது மோசமடைந்து விட்டது என்று பல்கலைக்கழகம் கருதுகிறதா? என்ற கேள்விகள் எழுகி றது. தங்களது கருத்தை வெளிப் படுத்தும் உரிமையை மக்களுக்கு அடிப்படை உரிமையாக இந்திய அரச மைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. அர சமைப்புச் சட்டத்தின் முகப்புரை முன் வைக்கும் அரசியலை மாணவர்கள் விவாதிக்காமல், எவ்வாறு ஒரு வலு வான மக்களாட்சியை இந்தியாவில் உருவாக்க முடியும்? கூட்டாட்சி தத்து வத்தின் அடிப்படையிலான இந்தியா வில், ஒன்றிய மற்றும் மாநில அரசாங் கம் எவ்வாறு அமைக்கப்படுகிறது? ஒன்றிய, மாநில அரசுகளின் அதிகார எல்லைகள், அரசாங்கத்தின் அங்கங்க ளான சட்டம் இயற்றும் அவை (Legislature), சட்டத்தை நடைமுறைப் படுத்தும் செயலாட்சி (Executive), இயற்றப்படும் சட்டமும், அரசின் நட வடிக்கைகளும் அரசமைப்புச் சட்டத் தின்படி இருப்பதை உறுதிசெய்யும் நீதித்துறை (Judiciary) ஆகியவற்றுக் குள் இருக்கும் அதிகாரப் பகிர்வு ஆகி யவற்றைக் குறித்து விவாதிப்பதே அர சியல் செயல்பாடு.  

கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடத் திட்டத்தில் உள்ள‌மொழி, அறிவியல்,  சமூக அறிவியல், வணிகவியல் உள் ளிட்ட பாடங்கள் நமது அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுகிறதா என்பதை கல்வி வளா கத்தில் விவாதிக்கலாம் வேறு எங்கு  விவாதிக்க முடியும்? நியாயமான விவா தம் தவறுகளை அம்பலப்படுத்த உத வும். மக்கள் தெளிவு பெறுவார்கள். மக் கள் தெளிவு பெற்றால் அரசைக் கேள்வி கேட்பார்கள். கேள்விகளை எதிர்கொள்ள முடியாததால் விவா தத்தை தடுக்க முயற்சி நடக்கிறது. இது  கல்வியியல் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கை. புத்தர் முதல் பாபா சாகேப் அம்பேத்கர் வரை உரையா டல் மூலமே கல்வி கற்க இயலும் என்று  சொன்ன கல்வி முறைக்கு எதிராக உள் ளது. “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற திருவள் ளுவரை விவாதிக்காமல் எவ்வாறு கசடற கற்பது? “வேந்தர்”, “துணை  வேந்தர்” என்ற பெயர்கள் இந்திய அர சமைப்புச் சட்டம் நடைமுறையில் உள்ள இந்தியாவில் உயர் பொறுப் பின் பெயர்களே. அரசமைப்புச் சட்டத் தின்படி தான் கல்வி வளாக உயர் பொறுப்பில் இருப்பவர்கள் செயல்பட முடியும். வேந்தர் என்பதாலோ, துணை  வேந்தர் என்பதாலோ தான் விரும்பாத ஒன்றை மற்றவர் செய்யக்கூடாது என்று ஆணையிட முடியாது. இந்திய மரபிற்கு மாற்றாக, அந்நியக் கருத் தாக்கங்களான இத்தாலியின் பாசிசக்  கருத்தாளர் முசோலினி, ஜெர்மனியின் நாசிசக் கருத்தாளர் ஹிட்லர், அமெரிக் காவின் அடக்குமுறை அரசியல் வித்த கர் மெக்கார்த்தி ஆகியோர் முன் வைத்த அரசியல் விவாதத்தை தடுக் கும் ஆணையை/சுற்றறிக்கையை “பெரியார்” பெயரைத் தாங்கி நிற்கும் பல்கலைக்கழகம் வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது. எனவே, பெரியார் பல்கலைக்கழகம் இந்த சுற்ற றிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.