பொள்ளாச்சி, செப்.20- தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சியில் அனைத்துக்கட்சி சார்பில் புதனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர், சமத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலை சமூக விரோதிகளால் அவ மதிக்கப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடலில் அனைத்து அரசியல் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் இரா.மனோகரன், திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், சட்ட திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலாளர் அன்பரசன், மகா லிங்கம் மற்றும் சிபிஐ, காங்கிரஸ், விசிக, ஆதிதமிழர் பேரவை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மதிமுக, மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சியினர் திரளானோர் பங் கேற்றனர்.