districts

அடிப்படை வசதிகள் கேட்டு மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

தருமபுரி, செப்.19- குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்துத்தர வேண் டும் என வலியுறுத்தி, மஞ்ச நாயக் கனஅள்ளி ஊராட்சி மன்ற அலுவ லகத்தை மாற்றுத்திறனாளிகள் சங் கத்தினர் முற்றுகையிட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாக ரத்தை அடுத்த மஞ்ச நாயக்கன அள்ளி ஊராட்சிக்குபட்ட கடமடை, புதுப்பட்டி, மஞ்ச நாயக்கன்அள்ளி, நரசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிவறை, தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். மேலும், 100 நாள் வேலை மற்றும்  தொகுப்பு வீடுகள் கேட்டு விண்ணப் பித்துள்ளவர்களுக்கு, வீடு கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ்நாடு  அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினர், வியாழ னன்று மஞ்சநாய்க்கன அள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற் றுகையிட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கருவூரான், வட் டார துணைத்தலைவர் மாரியப்பன், மாவட்ட நிர்வாகிகள் சின்னமாது, புவனேஸ்வரி, சாலம்மாள், பொன் னையன், தர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தக வலறிந்த பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன், பெரும்பாலை காவல் ஆய்வாளர்  பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம் பவ இடத்திற்கு வந்து கோரிக்கை களை கேட்டறிந்தனர். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள்  வேலை மற்றும் அடிப்படை வசதி களை செய்து கொடுக்கப்படும் என  உறுதியளிக்கப்பட்டது. அதன்பேரில்  அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.