சேலம், ஜூன் 15- ஒதுக்கப்பட்ட நிலத்தில் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஓமலூர் வட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டன
தங்களுக்காக ஒதுக்கீடு செய் யப்பட்ட நிலத்தில், 37 மாற்றுத்திற னாளிகளுக்கும், வீட்டுமனைகளை வரையறை செய்து உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என வலியு றுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங் கத்தினர் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற் றுகையிட்டனர். இதுகுறித்து சங்கத் தின் மாவட்டத் தலைவர் ஹரிகிருஷ் ணன் கூறுகையில், மாற்றுத்திறனா ளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி பல ஆண்டுகளாக போராட் டங்கள் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து இதற்கு முன்பி ருந்த ஓமலூர் வட்டாட்சியர் பட்டா வழங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்தார். ஆனால், தற் போதுள்ள அதிகாரிகள் பட்டா வழங்குவதற்கான எந்த நடவ டிக்கையும் எடுக்காமல், அதனை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக 37 பேருக்கும் பட்டா வழங்க வேண்டும், என்றார். இதை யடுத்து வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் போராட்டக்காரர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பட்டா வழங்குவதற் கான அனைத்து நடவடிக்கைக ளும் உடனடியாக எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று மாற்றுத்திறனாளி கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.