districts

img

வனப்பகுதியையொட்டி வாழ்ந்து வருபவர்களை வெளியேற்றக்கூடாது

தருமபுரி, ஜூன் 17- பல தலைமுறைகளாக வனப் பகுதியையொட்டி வாழ்ந்து வரும் பிற்படுத்தப்பட்ட மக்களை வனத்து றையினர் வெளியேற்றக்கூடாது என தருமபுரியில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட் டுள்ளது. வன உரிமைச் சட்டம் - 2006 நடைமுறை குறித்த கருத்தரங்கம், தருமபுரி அருளருவி அருட்பணி பயிற்சி மையத்தில் நடைபெற்றது. மனித உரிமை செயற்பாட்டாளர் கே.பி.செந்தில்ராஜா வரவேற்றார். 5 ஆவது அட்டவணை ஆதிவாசி கள் மாநில அமைப்பாளர் ஆ.ரெங் ங்கநாதன் அறிமுகவுரையாற்றி னார். தருமபுரி சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் சிறப்புரையாற்றினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுப.தென்பாண்டியன், ஆர்டிஎஸ் இயக்குநர் தர்மலிங்கம், தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் டி.வெங்க டேசன், தமிழ்நாடு பழங்குடி ஆன்றோர் பேரவை மாநில பொதுச்செயலாளர் எம்.குணசேக ரன், தமிழக பழங்குடி மக்கள் முன்னேற்ற நலச்சங்க தலைவர் தங்கராஜ் ஆகியோர் கருத்துரை யாற்றினர். இக்கருத்தரங்கில், பழங்குடி மக்களின் உரிமையை நிலைநாட்ட 2006 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் வன உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. தங்கள் வாழ்வாதாரத் திற்காக பட்டியலிடப்பட்ட பழங்குடி மக்கள் மற்றும் மூன்று தலைமை முறையாக வாழும் இதர வனம் சார்ந்து வாழ்வோர் குடியிருப்பு மற்றும் வனநிலம் பெறும் உரிமை யை பெறுகின்றனர். இச்சட்டத்தின் மூலம் ஒரு குடும்பம் 4 ஹெக்டர் வரை நிலம் பெறலாம். வனம் சார்ந்த வள உரிமையாக தேன், புளி, கல்பாசம் போன்ற சிறுவன மகசூல் சேகரிக்கவும், விற்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வனத்துக்குள்ளேயும், வெளியேயும் மீன்பிடிக்க நீர்நிலை களை பயன்படுத்தவும், கால்நடை களை மேய்க்கவும் உரிமை வழங் கப்பட்டுள்ளது. வேட்டையாடுதல் தவிர அவர்கள் கடைபிடித்து வந்த அனைத்து பாரம்பரிய மற்றும் கலாச்சார உரிமைகள் அனைத் தும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வன உரிமை சட்டத் தின் கீழ் இதுவரை இந்தியா முழுவ தும் 23,70,001 மக்களுக்கு 51,75, 112,44 ஏக்கர் நிலம் வழங்கப் பட்டுள்ளது. ஆனால், வளர்ந்த மாநி லம் என்று சொல்லக்கூடிய தமிழ் நாட்டில் இதுவரை 12,728 நபர்க ளுக்கு மட்டுமே வன உரிமை வழங் கப்பட்டுள்ளது. இது இந்தியள வில் வெறும் 0.5 சதவிகிதம் மட்டு மாகும். சமூக வன வள உரிமை பொறுத்தவரை இந்தியா முழுவ தும் 1,15,180 கிராமங்களுக்கு 1,38,38,711.50 ஏக்கர் வன நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 671 கிராமங்க ளுக்கு மட்டுமே நிலங்கள் வழங்க பட்டுள்ளது. இது சராசரியாக தேசிய அளவில் வெறும் 0.58 சதவிகிதம் மட்டுமே. அதுவும் அளவு தெளிவாக குறிப்பிடப்பட வில்லை. அதேசமயம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இது வரை 2210 வனம் சார்ந்து வாழ் வோருக்கு 2424.53 ஏக்கர் நிலம் வன உரிமையாக வழங்கபட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், வனத்துறை இடையூறுகளால் தமிழ்நாடு அரசு மிக மந்தமாக செயல்படுகிறது. தருமபுரி மாவட்டம், ஒகேனக் கல், சிங்காபுரம் வனப்பகுதியை யெட்டி மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இதர பிற்படுத்தப் பட்ட மக்களை வனத்துறை வெளி யேற்றக்கூடாது. இவர்களின் வாழ் வாதாரத்திற்கு மீன்பிடி அங்கீகாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கருத்தரங்கில் வலியுறுத்தப் பட்டது.