திருப்பூர், டிச.10- ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை யின்போது பரிசு பணம் ரூபாய் 1000 தரப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதைப் பெறுவதற்கு பொதுமக்கள் விண் ணப்பத்துடன் ரேஷன் கடைக்கும், வங்கி கிளைகளுக்குமாக அலைந்து கொண்டிருக் கின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரி சுப் பணம் கொடுக்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று பிறகு கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. எனினும் இந்த தொகுப்பு பொருட்கள் வழங்கி யதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு பொங் கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்புக்கு பதி லாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1000 பொங்கல் பணம் வழங்க அரசு முடிவு செய்தி ருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற் காக விண்ணப்பம் செய்வதற்கு பொதுமக் கள் பலர் நியாய விலை கடைகளுக்கும், வங் கிகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். இது பற்றி தமிழக அரசு முறையான அறி விப்பு எதுவும் வெளியிடவில்லை.
எனினும் பொதுமக்கள் நியாய விலை கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு பணம் பெறுவதற் காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, கடை விற்பனையாளர்களிடம் கொடுத்து வரு கின்றனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்த உத்தரவும் வராத நிலையில் இந்த விண் ணப்பங்களை பெற முடியாது என்று விற்ப னையாளர்கள் விண்ணப்பத்தைப் பெற மறுப்பு தெரிவிக்கின்றனர். அதேசமயம் பலர் வங்கி கிளைகளுக்குச் சென்று ரேஷன் பரிசு பணம் பெற வேண்டும் என்று விண்ணப்பங்களை கொடுக்கின்றனர். வங்கிகளிலும் அலுவலர்கள் இது போன்ற விண்ணப்பங்களை பெற இயலாது என்று திருப்பி அனுப்புகின்றனர். இது பற்றி பொதுமக்கள் தரப்பில் கூறுகை யில், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் பொங்கல் பரிசு பணம் தருவது குறித்து தமிழக அரசு தெளிவுப டுத்த வேண்டும். பொங்கல் பரிசு பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விண்ணப் பத்துடன் செல்கிறோம். ஆனால் எங்களை ரேஷன் கடைகளிலும் வங்கிகளிலும் மாறி மாறி அலைகழிக்கின்றனர் என்று கூறுகின் றனர்.மக்கள் அலைக்கழிக்கப்படுவதை நிறுத்துவதற்கு இது பற்றி தமிழக அரசு இது பற்றி உரிய முறையில் தெளிவுபடுத்த வேண் டும் என நியாய விலைக் கடை விற்பனையா ளர்கள் கூறுகின்றனர்.