தருமபுரி, ஏப்.7- வாகன நெரிசலில் திணறும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டட வளாகத்தில் இருந்து தடங்கம் நெடுஞ்சாலை வரை உள்ள சாலையை விரிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலி யுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் பின் பகுதியில் அமைந்துள்ள குடி யிருப்பு பகுதிகள் அங்கி ருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தருமபுரி - சேலம் 4 வழி பைபாஸ் சாலை வரை விரிவடைந்து கொண்டே செல்கின்றன. கடந்த சில ஆண்டு களாகவே இப்பகுதியில் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்தப் பகுதிகளிலிருந்து தரும புரி நகர பகுதிக்கு வந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் வெண் ணாம்பட்டி ரயில்வே கேட், ரயில் நிலைய பிரிவு சாலை ஆகிய பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசலால் திணறி வரு கிறது. இதற்கு தீர்வு காண தருமபுரி - சேலம் பிரதான சாலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தை ஒட்டி வடக்கு பகுதி யில் தொடங்கி ரயில்வே சுரங்கப்பாதை வழியாக தடங்கம் பகுதியில், தருமபுரி - சேலம் 4 வழி நெடுஞ்சாலையுடன் இணையும் 2 கிலோமீட்டர் நீளம் கொண்ட தார்ச்சாலை யை விரிவுபடுத்த வேண்டும். மேலும், குறுக லாக உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை விரிவுப்படுத்தி, நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்து செல்லும் வகையில் அகலப் படுத்த வேண்டும். சாலையை விரிவுப் படுத்தும் பணியை விரைவாக துவங்கி, தருமபுரி நகரில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி யுள்ளனர்.