districts

img

வெள்ளத்தில் சடலத்தை சுமந்து செல்லும் மக்கள்

ஈரோடு, நவ.14- கடம்பூர் மலைப்பகுதியில் ஆறு களின் குறுக்கே பாலம் இல்லாத தால் மரணம் அடைந்தவரின் சட லத்தை 3 கி.மீ.தூரம் கிராம மக்கள் தோளில் சுமந்து சென்றனர்.  ஈரோடு மாவட்டம், சத்தியமங்க லம் அருகே உள்ள கடம்பூர் மலைப் பகுதியில் மாக்கம்பாளையம் செல் லும் சாலையில் அடர்ந்த வனப்பகுதி யில் அரிகியம் மலை கிராமம் உள் ளது. இக்கிராமத்தை சேர்ந்த விவ சாயி சித்துமாரி (55). கடந்த வாரம் உடல்நிலை சரியின்றி சத்தியமங்க லம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், ஞாயி றன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். இதன்பின் சித்துமாரியின் உடலை இலவச அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.   அப்போது கடம்பூர் அடுத்துள்ள  அடர்ந்த வனப்பகுதியில் உள்ள குரும் பூர் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனம் அதற்கு மேல் செல்ல முடி யாத நிலையில், ஒட்டுநர் சடலத்தை குரும்பூர் பள்ளத்தின் அருகிலேயே இறக்கிவிட்டு சென்று விட்டார். இதை யடுத்து, அரிகியம் மலைக்கிராம மக் கள் உயிரிழந்த சித்துமாரியின் உடலை சுமந்தபடி காட்டாற்றை கடந்து சென் றனர். பின்னர் அங்கிருந்து அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக 3 கி.மீ. தூரம் சடலத்தை சுமந்து சென்று அரிகியம் கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.  இதுகுறித்து கிராமமக்கள் கூறு கையில், உயர்மட்ட பாலம் இல்லாத தால் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் உயிரை பணயம் வைத்து சடலத்தை செல்ல வேண்டிய அவ லம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் உள்ள குரும்பூர் பள்ளம், சக்கரைப் பள்ளம் ஆகிய 2 காட்டாறுகளின் குறுக்கே ரூ.7 கோடி செலவில் உயர் மட்ட பாலம் கட்ட ஒப்பந்தம் விடப் பட்ட நிலையில், விரைவில் பாலம்  கட்டுமான பணியை தொடங்குவ தற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த னர்.