districts

img

குறித்த நேரத்திற்கு பேருந்து கிடைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

அவிநாசி, ஜூலை 19- அவிநாசி அருகே உள்ள தேவாராயம் பாளையத்தில் குறித்த நேரத்திற்கு பேருந்து கள் வருவது இல்லை எனவும், இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகக் கூறி பொது மக்கள் செவ்வாயன்று சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட தேவாராயம்பா ளையத்திற்கு 1G, 11B என இரண்டு அரசு பேருந்துகளும் மற்றும் தனியார் பேருந்து களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக 11B பேருந்து இயக்கப்படுவதில்லை. இச் சூழலில் 1G பேருந்தும் காலதாமதமாக வருவ தால், அப்பகுதி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரும்  சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதேபோல்,  தனியார் பேருந்து  இப்பகுதிக்கு ஆட்கள்  குறைவு காரணமாக மாற்று வழியில் இயக்கப் படுவதால், ஆவேசமடைந்த அப்பகுதி மக் கள் செவ்வாயன்று தேவாராயம்பாளையம் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த  திருமுருகன்பூண்டி காவல் ஆய்வாளர் ஜெக நாதன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், திருப்பூர் போக்குவரத்து கிளை மேலாளர் ஜெகதீஷ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பேருந்துகள் குறிப்பிட்ட நேரத் துக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக் கப்படும் என உறுதியளித்தார்.