districts

img

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

உடுமலை, ஜன.9- உடுமலை அருகே உள்ள  உடுக்கம்பாளையம் கிராமத் தில், பல ஆண்டுகளாக  மாரி யம்மன், செல்லாண்டியம்மன் உள்ளிட்ட கோவில் திருவிழா பணிகள், நோன்பு சாட்டுதல்,  கூட்டம் போடுதல், பூவோடு  எடுத்தல், ஆண்டுதோறும் தைமாதத்தில் சலகெருது  மரித்தல், தேவராட்டம் ஆடுதல், கும்மிய டித்தல், ஆடிப்பெருக்கு விழா, தைப்பூச விழா  உள்ளிடவை காலங்காலமாக பொது இடத் தில் நடைபெற்று வருகிறது. ஆனால், தற் போது இந்த பொது இடத்தை  சட்டத்திற்குப் புறம்பாக, தனிநபர் ஒருவர் ஆக் கிரமிப்பு செய்து கிராம மக்களுக்குத்  தொடர்ந்து மிரட்டல் விடுத்து, விழா கொண்டா டுவதைத் தடுத்து வருகிறார். இது குறித்து, கிராம மக்கள் சார்பாக , வட் டாட்சியர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை எனப் பலமுறை மனு கொடுத்தும் உரிய நட வடிக்கை எடுக்கவில்லை எனக்கோரியும், பொது இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பிலி ருந்து மீட்டு , கிராம மக்கள் பயன்பாட்டிற்கு  வழங்க வேண்டும் எனக்கோரி உடுக்கமா பாளையம் கிராம மக்கள் கோவில் மாடுக ளுடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். இதன்பின் அலு வலகத்தில் மனு அளித்து சென்றனர்.