கோவை, அக்.29 – கோவை கார் வெடிப்பு சம்ப வத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜக அறிவித்த பந்த் போராட்டத்திற்கு, வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வேறு வழி யின்றி பாஜக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. கோவையில் கடந்த 23 ஆம் ்தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம் பவத்தை பயன்படுத்தி எப்படி யாவது மதரீதியான பதட்டத்தை உருவாக்க சங்பரிவார் அமைப் பினர் முயன்று வந்தனர். சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு மாறான பல தகவல்களை பரப்பி வந்தனர். ஆனால் தமிழக காவல் துறை துரிதமாக செயல்பட்டு தீபா வளியன்று எவ்வித பதற்றமு மின்றி மக்கள் மகிழ்ச்சி யாக கொண் டாடும் படியான நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதனால் மக்க ளின் இயல்பு வாழ்க்கையில் எந்த மாற்றமுமின்றி சகஜமாக இருந்து வருகிறது. கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் நடத்திய சோதனையில் வெடி குண்டு தயா ரிப்பதற்கான பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, வெடிமருந்து தயா ரிக்கும் பொருட்களின் பின்னணி குறித்து விசாரிப்பதற்காக தமிழக அரசு தேசிய புலனாய்வு முகமை யை விசாரிக்க பரிந்துரை செய் தது.
இந்நிலையில், எப்படியாவது கார்வெடிப்பு சம்பவத்தை வைத்து கோவையில் மீண்டும் பதற்றத்தை உருவாக்கும் விதமாக அக்டோபர் 26ம் தேதி, பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதா கிருஷ்ணன், பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனி வாசன் ஆகியோர் கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து அக்டோபர் 31ம் தேதி கோவையில் பந்த் நடைபெறும் என அறிவித்தனர். இதனையடுத்து பயங்கர வாதத்தை எதிர்ப்போம், கோவை யை காப்போம். மீண்டுமொரு குண்டுவெடிப்பை கோவை தாங்குமா? வருகின்ற 31 ஆம் தேதி பாஜக நடத்தும் கடை யடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தாரீர் என கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராம சாமி காணொளி மூலம் பேசி சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இதனால், கோவை மக்கள் பாஜகவின் இந்த நாகரீகமற்ற அரசி யலை கண்டு முகம் சுழித்தனர். “அனைவருக்கு தேவை - அமைதி யான கோவை’’ ஒரு போதும் பிரிவி னைக்கு இடமளிக்க மாட்டோம் என பலரும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந் தனர்.
இந்நிலையில், எரிகிற நெருப் பில் பாஜக எண்ணை ஊற்றுவதற் காக பாஜக பந்த் அறிவித்திருப்ப தாக சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித் தார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை யில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அமைதியாக இருக்கும் கோவையில், ‘மயான அமைதி’ யை உருவாக்க பாஜக முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் பட்டது. தொடர்ந்து கோவையின் அனைத்து பகுதி மக்களும் பாஜக வின் பந்த் அறிவிப்பு போராட் டத்தை காவல்துறையினர் அனு மதிக்க கூடாது என கோரி வந்தனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, கோவையில் பாஜக அறிவித்த பந்த்திற்கும் எங்க ளுக்கும் எந்த சம்பந்தமில்லை என சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி உள்ளிட்டோரை கழட்டிவிட்டு கையை தூக்கினர். இதனையடுத்து காவல்துறை சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. பொதுமக்களும் பந்த்தை ஏற்க வில்லை, நீதிமன்றம் குட்டுகிறது. சிக்கினால் சிதைத்துவிடுவார்கள் என்கிற நிலையில் வேறு வழியின்றி பாஜக பந்த் போராட்டத்தை திரும்ப பெற்றது.