திருப்பூர், மே 2 - பல்லடம் அருகே அனுப்பட்டியில் இரும் பாலை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் நேரில் அங்கு சென்று ஆய்வு செய்து உரிய தீர்வு காண வேண்டும் என்று கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலியு றுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத்தை செவ்வாயன்று மாலை 4 மணிக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் நேரில் சந்தித்து பின்வரும் கோரிக் கைகள் குறித்து வலியுறுத்தினார். பல்லடம் வட்டம், அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் இரும்பு உருக்காலை சுற்றுச் சூழல் மாசு பாட்டை ஏற்படுத்தி வருவதை ஒட்டி அப்பகுதி பொதுமக்கள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட் டங்களை நடத்தி வருகிறார்கள். மாவட்ட ஆட் சித் தலைவர் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பிரச்சனைக்கு உரிய தீர்வை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை, வரு வாய்த் துறை மூலம் பொது மக்களுக்கு அச்சு றுத்தல் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். பல்லடம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் ஆய்வு பணிகளின்போது ஏராளமான பொது மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்தும், உடனடி யாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகளை தீர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பல்லடம் வட்டம், பூமலூர் ஊராட்சி வலை யபாளையம் கிராமத்திற்கு இது நாள் வரை யில் எவ்வித பேருந்து வசதியும் இல்லாமல் உள்ளது. எனவே ஆய்வு பயணத்தின் போது அப்பகுதி மக்களிடமிருந்து பேருந்து வசதி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அப்பகுதி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல் லடத்திலிருந்து சோமனூர் (பி 9) அரசு பேருந்தை வலையபாளையம் வரை நீட்டித்து தர வேண்டும். பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நத்தம் வகைப்பாட்டில் உள்ள நிலங்கள் பத்தி ரப்பதிவு எதுவும் நடைபெறாமல் இருப்பதை சுட்டிக்காட்டியும், கிராமப்புற ஏழை மக்கள் வீட்டு அடமான கடன் பெறுவதற்கும், பெயர் மாற்றங்கள் செய்வதற்கும் மிகவும் நெருக் கடியாக உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் உரிய நடவடிக்கை கள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். திருப்பூர் அரசு தலைமை மருத்துவம னையில் நோயாளிகள் நல சங்கம் இது நாள் வரையில் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. எனவே நோயாளிகள் நல சங்கம் உடனே துவக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரக் கூடிய நோயாளிகளுக்கு உரிய முறையில் வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை யில் அனுப்பப்படும் மனுக்கள் காரணம் இன்றி தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி மாற்றுத்திறனாளிகள் உடைய கோரிக்கை களை எவ்வித தாமதம் இன்றி உடனே நிறை வேற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலருக்கு அறிவுறுத்த வேண்டும் என வும் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலா ளர் செ.முத்துக் கண்ணன், மாநில குழு உறுப் பினர் கே.காமராஜ், பல்லடம் ஒன்றிய செயலா ளர் ஆர்.பரமசிவம் ஆகியோர் உடனிருந் தனர்.