districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரேசன் அரிசி கடத்தல்

இளம்பிள்ளை, மார்ச் 15- சேலம் மாவட்ட   பறக்கும் படை வருவாய்த்துறையினர், சங்ககிரி ரயில் நிலையத்தில் திங்களன்று இரவு சோதனை  மேற்கொண்டதில் அண்டை மாநிலத்துக்கு கடத்த இருந்த  500 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல்  செய்து விசாரித்து வரு கின்றனர்.  சங்ககிரி ரயில் நிலையத்திலிருந்து அண்டை மாநிலத் திற்கு ரயில் மூலம் ரேசன் அரிசி கடத்துவதாக சேலம் மாவட்ட  பறக்கும் படை வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத் துள்ளது. இதையடுத்துபறக்கும்பபடை வட்டாட்சியர்  ராஜேஸ்குமார் தலைமையில், தனிவருவாய் ஆய் வாளர் குமார், வருவாய்த்துறை அலுவலர்கள் ரயில் நிலைய  வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், அரிசி  மூட்டைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் 500 கிலோ  ரேசன் அரிசியை பறிமுதல் செய்து நாரணப்பன்சாவடியில்  உள்ள அரசு நுகர்ப் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்: 15 வழக்குகளில் தீர்வு

ராசிபுரம், மார்ச் 15- ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புத னன்று நடைபெற்ற லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன் றத்தில் 15 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.  தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும்; மாவட்ட  முதன்மை நீதிபதியுமான என்.குணசேகரன் வழிகாட்டு தல்படி,  ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கு தொடர்பான, மக்கள்  நீதிமன்றம் ராசிபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும்,  சார்பு நீதிபதியுமான பி.தீனதயாளன் தலைமையில்  நடைப்பெற்றது.  இதில் வழக்கறிஞர் எஸ்.முத்தீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்ற அமர்வில் நீதிமன்ற நிலுவை வழக்குகளில் தீர்வு  காணப்பட்டது.  இதில் சமரச தீர்வுக்கு வரப்பெற்ற  வழக்குகள்  மீது விசாரணை மேற்கொண்டு 15 வழக்குகளில் மொத்தம்  ரூ.60 லட்சத்து 76 ஆயிரத்து 500 தொகை மதிப்பிற்கு  வழக்கில்  தீர்வு காணப்பட்டது.

ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்டவர் கைது

கோவை, மார்ச் 15- இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.  கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சத்திய பாண்டி என்பவரை அரிவாளால் வெட்டப்பட்டும், துப்பாக்கி யால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார். இதேபோல் கோவை நீதிமன்றம் அருகே கோகுல் என்ற வாலிபர் படு கொலை செய்யப்பட்டார். இந்த இரு கொலை வழக்கு களிலும் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். விசாரணையில், கோகுல் கொலை சம்பவம்  பழிக்கு பழியாக நடந்தது என தெரிய வந்தது. சில ஆண்டு களுக்கு முன்பு குரங்கு ஸ்ரீராம் (22) என்பவரை கொலை செய்த  வழக்கில் கோகுல் முக்கிய குற்றவாளியாக இருந்தார். அதனால் குரங்கு ஸ்ரீராம் கூட்டாளிகள் கோகுலை கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் குரங்கு ஸ்ரீராமுக்கும், கோகுலுக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு காரணமாக ஏற்பட்ட மோதலில் இக்கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் கோவை மாநகர போலீசார் சமூக வலைதள பக்கங்களை தீவிரமாக கண்காணித்தனர்.  இந்நிலையில், இளம்பெண் ஒருவர் “பிரண்ட்ஸ் கால்  மி தமன்னா” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் புகைப்பிடித்த வாறும், பட்டாகத்தியுடனும் வீடியோ பதிவிட்டிருந்தார். அதில்  வன்முறையை தூண்டும் பாடலுடன் வீடியோ பதிவிட்டி ருந்தார். மேலும் நீதிமன்றம் அருகே கோகுலை கொலை  செய்த நபர்களுடன் இவருக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்பு  இருப்பது தெரியவந்தது.  இதுகுறித்த விசாரணையில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வினோதினி (எ) தமன்னா பீளமேட்டில் தங்கி இருந்ததும், 2 ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா வழக்கில் ஆண்  நண்பருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது.  இதற்கிடையே அவர் போத்தனூரை சேர்ந்த ரவுடி விக்கு சண்முகம் என்பவருக்கு ஆதரவாக விக்கு - நா- பேன்ஸ் என்ற  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளி யிட்டு இருந்தார். இது தொடர்பாக போலீசார் அவர் மீது  ஆயுத தடை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.  மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தமன்னா நான் ஆயுதங்களுடன் வீடியோ  வெளியிட்டது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தற் போது நான் திருமணம் ஆகி 6 மாதம் கர்ப்பமாக உள்ள தாகவும், கணவருடன் வாழ்ந்து வருவதாகவும், தன்னை தேட  வேண்டாம் என வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.  இந்நிலையில், தமன்னா சங்ககிரி பகுதியில் பதுங்கி  இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் புதனன்று சங்க கிரியில் தமன்னாவை கைது செய்தனர். பின்னர் அவரை  கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

பாலியல் தொல்லை

நீலகிரி, மார்ச் 15- நீலகிரி மாவட்டம், கோத் தகிரி அருகே ஒரு கிராமத்தை  சேர்ந்தவர் கண்ணன் என்ற  மணிகண்டன் (26). இவர்  பக்கத்து வீட்டில் வசிக்கும்  தனது 3ஆம் வகுப்பு படிக்கும்  8 வயது சிறுமியிடம் ஒளிந்து  விளையாடலாம் என  கூறி பாலியல் தொல்லை  கொடுத்ததாக தெரிகிறது.  இதுகுறித்து சிறுமி தனது  பெற்றோரிடம் நடந்த  சம்பவத்தை கூறி உள்ளார். இதுகுறித்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்  புகார் அளித்தனர். அதன் பேரில் ஆய்வாளர் கோமதி விசாரணை நடத்தினார். இதையடுத்து மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார்.

லஞ்சம்: வருவாய் உதவியாளருக்கு சிறை

நீலகிரி, மார்ச் 15- வீட்டு வரி தொடர்பான ஆவணத்தில் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.3 ஆயிரம்  லஞ்சம் வாங்கிய உதகை  நகராட்சி வரு வாய் உதவியாளருக்கு  4 ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதித்து  நீலகிரி மாவட்ட அமர்வு  நீதிமன்றம்  செவ்வாயன்று  உத்தரவிட்டது.  நீலகிரி மாவட்டம், உதகை காந்தல் பகுதி யைச் சேர்ந்தவர் மும்தாஜ் பாட்ஷா (55).   இவர் தனது வீட்டு வரி தொடர்பான ஆவ ணத்தில் பெயர் மாற்றம் செய்ய உதகை  நக ராட்சி அலுவலகத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், வருவாய் உதவியாளராக பணியாற்றி வந்த பாக்கியராஜ், பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்  கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மும்தாஜ் பாட்ஷா இது குறித்து  உதகை  லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல்  தெரிவித்தார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை  துணைக் கண்காணிப்பாளர் பெரோஸ் கான், ஆய்வாளர் ஜெரால்ட் அலெக்சாண்டர் ஆகி யோர் ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை நகராட்சி அலுவலகத்தில் பாக்கியராஜிடம், மும்தாஜ் பாட்ஷா கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாக்கியராஜை பிடித்து கைது செய்தனர். உதகையிலுள்ள மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக் கில், செவ்வாயன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் லஞ்சம் கேட்ட வழக்கில் 3 ஆண்டுகள்  சிறைத் தண்டனை, ரூ.1000 அபராதமும், லஞ்சப் பணம் பெற்ற வழக்கில் 4 ஆண்டு கள் சிறைத் தண்டனை, ரூ.2000 அபராத மும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.   இதைத் தொடர்ந்து ஏற்கெனவே சிறை யில் இருந்து பிணையில் வெளியே வந்த பாக்கியராஜ்  கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ரேணுகா காா்த்திகேயன் ஆஜரானார்.

திருப்பூர் மாநகரில் சீரான குடிநீர் விநியோகம் க.செல்வராஜ் எம்எல்ஏ ஆணையருக்கு கடிதம்

திருப்பூர், மார்ச் 15 - திருப்பூர் மாநகரில் சீரான குடிநீர் விநியோகம் செய்வ தற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு  எம்எல்ஏ க.செல்வராஜ் மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்  எழுதியுள்ளார். இது குறித்து புதனன்று அவர் அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது: தற்போது கோடை காலம் துவங்கி யுள்ளது. திருப்பூர் மாநகரில் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி  செய்வதற்கு, ஏற்கெனவே செயல்பட்டு வந்த குடிநீர் திட்டங் கள் போதுமானதாக இல்லை என்பதால் 4ஆவது குடிநீர் திட்ட  பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த திட்டப் பணிகள் நடைபெற் றுக் கொண்டிருப்பதால் குடியிருப்பு  பகுதிகளுக்கு 10 நாட்கள்  அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக செல்லும் இடங்களில் எல்லாம் பொது மக்கள் குடிநீர் முறையாக வருவ தில்லை, வாரத்திற்கு ஒரு முறையாவது குடிநீர் வழங்க  வேண்டும் என கோரிக்கை வைத்தும், அரசின் மீது தங்கள்  அதிருப்தியை தெரிவித்த வண்ணம் உள்ளனர். எனவே ஆணையர் திருப்பூர் மாநகரத்திற்கு முறையான குடிநீர்  விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், சாலைகளில்  ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாவதை  விரைந்து தடுக்கவும், குடிநீர் விநியோகம் தாமதிக்கப்படும் பகுதிகளுக்கு உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வும் ஏற்பாடு செய்து, அரசின் மீது அதிருப்தி ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி க.செல்வராஜ் எம்எல்ஏ கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கல்குவாரி ஆய்வுக்கு குழு அமைப்பு விவசாயி உண்ணாவிரதம் நிறைவு

திருப்பூர், மார்ச் 15 - காங்கேயம் வட்டம் சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்ட  ராமபட்டினத்தில் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயி, அர சின் வாக்குறுதியைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித் துக் கொண்டார். மாவட்ட நிர்வாகம் அந்த கல் குவாரியில் புலத் தணிக்கை  செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது. வியாழக்கிழமை புலத்தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து அரசு  நடவடிக்கையில் நம்பிக்கை வைத்து, கடந்த நான்கு நாட்க ளாக  உண்ணாவிரதம் இருந்த சிவசாமி தனது போராட்டத்தை  முடித்துக் கொள்வதாக அறிவித்தார். காங்கேயம் வட்டாட்சி யர், காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்து சிவசாமியின்  உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்தனர்.

12ஆவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை மனு

திருப்பூர், மார்ச் 15- திருப்பூர் மாநகராட்சி முதலாம் மண்டலத்திற்கு உட்பட்ட  12ஆவது வார்டு பகுதியில் தார்ச்சாலை, குடிநீர் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மண்டல உதவி  ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்க ளன்று மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் பி கிளை சார்பில் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி அளிக்கப்பட்ட மனு வில் கூறியிருப்பதாவது, 12 ஆவது வார்டில் சொர்ணபுரி  அவென்யூ, மகாலட்சுமி கார்டன், சொர்ணபுரி அவென்யூ  விரிவு பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுக ளுக்கு மேலாகிறது. மேலும் இப்பகுதியில் கழிவுநீர் வெளி யேற முறையான சாக்கடை வடிகால் வசதி இல்லை. 11 நாட்க ளுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. 4 ஆம் திட்ட குடிநீர்க்  குழாய் இணைப்புப் பணிகள் முழுமையாக செய்யப்படா மல் உள்ளது. பாதாளச் சாக்கடை வீட்டு இணைப்புகளும்  இன்னும் முழுமையாக செய்யப்படவில்லை. தொடர் பராம ரிப்பு மேற்கொள்ளாததால் தெரு விளக்குகள் சரிவர எரிவ தில்லை. இப்பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டும் என்று  கேட்டுக்கொண்டிருந்தனர்.  மண்டல உதவி ஆணையரிடம் மனு அளித்த நிகழ்வில்  வேலம்பாளையம் பகுதி மூத்த தலைவர் வி.பி.சுப்பிரமணி யம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச்  செயலாளர் ச.நந்தகோபால், மோட்டார் சங்க மாவட்ட தலை வர் விஸ்வநாதன், கிளைச் செயலாளர்கள் வி.வெள்ளிங் கிரி, வி.ஆர்.சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

ஆர்டிஓ, பதிவுத்துறை அலுவலகங்களில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருப்பூர், மார்ச் 15 - திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவ லகம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்க ளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை  மேற்கொண்டனர். இதில் ரூ. 2 லட்சத்து 9 ஆயி ரம் பறிமுதல் செய்யப்பட்டது. 10க்கும் மேற் பட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகி றது.  திருப்பூர் வடக்கு வட்டார போக்குவ ரத்து அலுவலகம் மற்றும் திருப்பூர் நெருப் பெரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீ சார் புதனன்று திடீர் சோதனையில் ஈடுபட்ட னர். நெருப்பெரிச்சல் பத்திர பதிவு அலுவல கத்தில் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் சசிலேகா தலைமையிலான போலீசார், தரகர்கள் மற் றும் பத்திர எழுத்தர் உள்ளிட்டோரிடம் நடத் திய சோதனையில் ரூ. 61 ஆயிரம் பணத்தைப்  பறிமுதல் செய்தனர். இதேபோல் வடக்கு வட்டார போக்குவ ரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 1  லட்சத்து 48 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீ சார் பறிமுதல் செய்தனர். இரண்டு அலுவல கங்களிலும் இருந்த தரகர்கள் மற்றும் அதிகா ரிகள் என 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீ ஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஒரே நாளில் திருப்பூரில் இரு வேறு இடங்களில் கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து  9 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமு தல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் தரகர்கள் சிலர், பத்திரிகை நிறுவ னங்களின் அடையாள அட்டை வைத்திருந் தாக கூறப்படுகிறது இது குறித்தும் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முற்போக்கு வாசகர் வட்ட 67 ஆவது அமர்வு

திருப்பூர், மார்ச் 15 – திருப்பூர் முற்போக்கு வாசகர் வட்டத் தின் 67ஆவது அமர்வில் இ.பா.சிந்தன் எழு திய உக்ரைனில் என்ன நடக்கிறது? என்ற புத்த கம் அறிமுகம் செய்யப்பட்டது. செவ்வாயன்று மாலை தியாகி பழனிச் சாமி நிலையத்தில் நடைபெற்ற அமர்வுக்கு முற்போக்கு வாசகர் வட்டத்தின் முன்னாள் அமைப்பாளர் அ.நிசார் அகமது தலைமை வகித்தார். இதில் உக்ரைனில் என்ன நடக்கி றது என்ற நூலை அறிமுகம் செய்து, தற்போது  ருஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரின் பின்னணி, வரலாற்றுச் சூழல்,  அரசியல், பொருளாதார காரணங்கள் பற்றி  வாசகர் வட்ட அமைப்பாளர் பா.சௌந்தர பாண்டியன் விளக்கிக் கூறினார். இந்த அமர்வில் நூல் ஆர்வலர்கள், வாச கர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். வே. தூயவன் நன்றி கூறினார்.

தியாகி ரத்தினசாமி நினைவு தினம்: சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

திருப்பூர், மார்ச் 15 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகி இடுவாய் கே.ரத்தினசாமியின் 21ஆம்  ஆண்டு நினைவு தின பொதுக் கூட்டத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சார்பில் இடுவாய், மங்கலம் பகுதி பள்ளிகளில் சிறப் பிடம் பெற்ற மாணவியருக்கு பரிசு வழங்கப் பட்டது. இடுவாய் உயர்நிலைப் பள்ளி வளர்ச்சிக்  குழுத் தலைவரும், மங்கலம் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் பேரவைத் தலை வருமான சி.வி.விநாயகம் மூலம் மாணவ,  மாணவிகளுக்கு ரொக்கம் மற்றும் நினைவுப்  பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரு கிறது. அதன் ஒரு பகுதியாக இடுவாய் மைதா னத்தில் திங்களன்று நடைபெற்ற ரத்தின சாமி நினைவு தினப் பொதுக் கூட்டத்திலும் மாணவிகள் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற் றது. 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டில் மங்க லம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முதலி டம் பெற்ற பிரியதர்ஷினிக்கு ரூ.4 ஆயிரம்,  இடுவாய் அரசினர் உயர்நிலைப் பள்ளியில்  10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம்  பெற்ற ஜெ.ஸ்ரீநிதிக்கு ரூ.3 ஆயிரம், இடுவாய்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ஆம்  வகுப்பில் முதலிடம் பெற்ற எஸ்.தேசியா விற்கு ரூ.2 ஆயிரம், இடுவாய் ஊராட்சி ஒன் றிய தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற ஒய்.அட்சயாவிற்கு ரூ.1000  என பரிசுத் தொகை, புத்தகம் வழங்கப்பட் டது. இந்நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தி னர்கள் மாணவியருக்கு பரிசு வழங்கினர். முன்னதாக இக்கூட்டத்திற்கு இடுவாய் கிளைச் செயலாளர் கே.கருப்புசாமி தலைமை வகித்தார். இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் வரவேற்று, ஊராட்சி பணிகள் குறித்துப் பேசினார். மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் கே.சாமுவேல்ராஜ், ஒன்றியச் செயலா ளர் சி.மூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.  மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ்,  மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செற்குழு உறுப்பினர் கே.உண்ணி கிருஷ்ணன் உள்பட கட்சி அணியினர், பொது  மக்கள் பங்கேற்றனர்.

குமரன் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம் முகாம்

குமரன் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம் முகாம் திருப்பூர், மார்ச் 15 –  திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட  சிறப்பு முகாம் இடுவாய் ஊராட்சி சின்னம்மன் திருமண மண்ட பத்தில் செவ்வாயன்று தொடங்கியது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்ஸி பிலிப் வர வேற்க, இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணேசன் தலைமை வகித்தார். குமரன் கல்லூரி தலைவர் மற்றும் தாளா ளர் கே.அர்த்தனாரீஸ்வரன் முகாமை தொடக்கி வைத்துப் பேசினார். கூட்டுறவு வீட்டு வசதி சங்கச் செயலாளர் சி.முத்து ரத்தினம், அண்ணா கூட்டுறவு வீட்டுவசதி சங்கச் செயலாளர்  பி.ராதாகிருஷ்ணன், வீரபாண்டி கூட்டுறவு வீட்டுவசதி சங்கச்  செயலாளர் ஏ.நாகராஜ், திருப்பூர் கூட்டுறவு கட்டிட சங்க செய லாளர் கே.செல்வி வெங்கடாசலம், ஊராட்சித் துணைத் தலை வர் எஸ்.பரமசிவம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஏ.பிருந்தா நன்றி கூறினார்.

எம்எல்ஏ நிதியில் இடுவாயில் சாலை பணி 

திருப்பூர், மார்ச் 15 - திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் பல்லடம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.7 லட் சம் மதிப்பில் ராயல் அவென்யூ பகுதி காங்கிரீட் சாலை அமைக்கும் பணி செவ்வாயன்று துவங்கியது. பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன், இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணே சன், ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் எஸ். பரமசிவம், முன் னாள் மாவட்ட கவுன்சில் உறுப்பினர் எஸ்.எம்.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீதிமன்றம் அருகே வாலிபர் கொலை குற்றவாளிகள் 6 பேர் மீது குண்டர் சட்டம்

கோவை, மார்ச் 15- கோவை நீதிமன்றம் அருகே நடைபெற்ற கொலை சம் பவத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந் தது. கடந்த மாதம் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே கோகுல் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேரில் சூர்யா, கார்த்திக் பாண்டியன், டேனியல் ஆகிய 3 பேர் மீது கடந்த மார்ச் 10 ஆம் தேதியன்று குண்டர் சட்டம் போடப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 6 பேர் (விக்ரம், சிவிக்சன் பெர்னார்ட், விஷ்ணு பிரகாஷ், பரணி சௌந்தர், ஹரிஹரன், அருண் குமார்) மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதன் மூலம் கைது செய்யப்பட்ட 13 பேரில் இதுவரை 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசுப்பள்ளியில் நெல் விதை கண்காட்சி

நாமக்கல், மார்ச் 15- நாமக்கல் அருகே உள்ள அரசுப்பள்ளியில் நெல் விதை கண்காட்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள செட்டியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நெல் விதை கண்காட்சி பள்ளி தலைமை ஆசிரியர் கைலாசம் தலைமையில் நடைபெற்றது. இதில், 65 வகையான நெல்  மற்றும் 130 வகையான காய்கறி விதைகள் வைக்கப்பட்டிருந் தன. இக்கண்காட்சியை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங் கிணைப்பாளர் ரகுநாத் கலந்து கொண்டு, காட்சிப்படுத்தப் பட்டிருந்த விதைகளின் பெயர்களைக் கூறி, அவற்றின் பயன் பாடுகள் குறித்து உரையாற்றினார். இதில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தேசிய பசுமை படை பள்ளி ஒருங்கிணைப்பாளர் பரிமளம் நன்றி கூறினார்.

திட்டப்பணிகளில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் வலியுறுத்தல்

தருமபுரி, மார்ச் 15- வளர்ச்சி திட்டப்பணிகளில் முறைகேட் டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் வலியு றுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற கூடத்தில் செவ்வா யன்று, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமையில் நடை பெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்க டேஸ்வரன், கோவிந்தசாமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் சரஸ்வதி முருகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத் தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பேசுகையில், தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு பொது நிதி மற்றும் 15 ஆவது நிதி குழு  மானிய திட்டத்தின் கீழ் கடந்தாண்டில் ரூ.2  கோடி மதிப்புள்ள திட்டப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத் தும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்க ளுக்கு தெரியாமலேயே நடந்துள்ளது. இதில், எந்த பணிக்கும் மாவட்ட ஊராட்சி குழு உறுப் பினர்கள் பரிந்துரை கடிதங்கள் கொடுக்க வில்லை. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து மேற்கொள் ளப்படும் திட்டப்பணிகள் அனைத்தும் சம் பந்தப்பட்ட உறுப்பினர்களின் ஒப்புதல் கடி தம் பெற வேண்டும் என்று கூறினர். இதற்கு பதிலளித்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் பேசுகை யில், மேற்கூறிய முறைகேடுகள் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும், என்றார்.

முள்ளம்பன்றியுடன் சிக்கிய 3 பேருக்கு சிறை

உதகை, மார்ச் 15- நீலகிரி மாவட்டம், கூடலூரிலிருந்து காரில் கேரளாவைச் சேர்ந்த சிராஜுதீன், அப்துல், முனீர், ஆகிய 3 பேர் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சேரம்பாடி காபி காடு பகுதியில் சாலையின் குறுக்கே வந்த முள்ளம் பன்றி இவர்களது காரில் மோதி உயிரிழந்தது. இதைய டுத்து இறந்த முள்ளம்பன்றியை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சோலாடி காவல்துறை சோதனைச்சாவடியில் போலீசார் வாகன தணிக் கையில் ஈடுபட்டிருந்தபோது, இவர்கள் சென்ற கார் தணிக்கை  செய்யப்பட்டது. அப்பொழுது காரின் பின்பகுதியில் ரத்தக் கசிவு காணப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த காவல் துறை யினர் சோதனை செய்தபோது, முள்ளம்பன்றி என்று கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து சேரம்பாடி வனத்துறையின ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் அய் யனார் தலைமையிலான வனத்துறையினர் சிராஜுதீன், அப் துல், முனீர், ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்கள் பய ணித்த கார் மற்றும் முள்ளம்பன்றியை பறிமுதல் செய்தனர். இதன்பின் மருத்துவ பரிசோதனைக்கு பின் பந்தலூர் நீதி மன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு கூடலூர் கிளை சிறையில் மூவரையும் அடைத்தனர்.

அதிமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டிகள் மயக்கம்

சேலம், மார்ச் 15- சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தின்போது இரண்டு மூதாட்டிகள் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது. இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதி யாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக பல்வேறு பகு திகளிலிருந்து கூட்டம் சேர்க்கும் நோக்கில், வயதான மூதாட்டி கள் மற்றும் பெண்கள் அழைத்து வரப்பட்டனர். இதில் வெயி லின் தாக்கத்தினால், மூதாட்டிகள் இருவர் மயங்கி விழுந்த னர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவ லர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த செய்தியை படம் பிடித்த செய்தியாளர்களிடம் அதிமுக வினர், மயங்கி விழுந்தவர்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்க  வந்தவர்கள் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று மகளிருக்கான விளையாட்டு போட்டி

தருமபுரி, மார்ச் 15- சர்வதேச மகளிர் தின விழா முன்னிட்டு, தருமபுரி மாவட்ட அளவில் பெண்க ளுக்கான விளையாட்டு போட் டிகள் வியாழனன்று (இன்று)  காலை 9 மணிக்கு மாவட்ட  விளையாட்டு அரங்கில் நடை பெற உள்ளது. தடகளம் பிரி வில் 100, 200, 400மீ, குண்டு  எறிதல், நீளம் தாண்டுதல், இறகுப்பந்து (ஒற்றையர் மற் றும் இரட்டையர்), கபடி,  கயிறு இழுத்தல் ஆகிய போட் டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.