districts

img

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திடுக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச.17- புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தேசிய ஓய்வூதியர் தினத் தில் ஓய்வூதியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்து,  பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண் டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஒன்றிய, மாநில அரசு பொதுத்துறை நிறுவ னங்களின் ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் என். மணிபாரதி தலைமை வகித்தார். இதில், ஒருங்கிணைப்புக்குழு செயலாளர்  என்.ராமசாமி, நிர்வாகிகள் நந்தகுமார், எஸ். ஜெய்சங்கர், நாகராஜன், வி‌‌.சண்முகம், மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். நிறைவாக பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் சி.பரம சிவம் நன்றி கூறினார்.

சேலம்

சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு தபால்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சங் கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.கனகவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் என். சண்முகம், மாநில நிர்வாகிகள் கே.ஆர்.கணேசன், டி.நேதாஜி சுபாஷ் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர்.

தாராபுரம்

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங் கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஓய்வூ தியர் உரிமை நாள் பேரவைக் கூட்டம்  தாராபுரத்தில் கூட்டமைப்பின் மாவட்ட தலை வர் சி.ஜெயப்பிரகாசம் தலைமையில் நடை பெற்றது. இதில், மாவட்ட செயலாளர் க. சண்முகம், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சு.சந்திரன்,  மாவட்ட பொருளாளர் கி.மேகவர்ணன், ஆர்.சேதுராமன், எம்.நடராஜன், மா.நாட்ரா யன், எஸ்.எஸ்.அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.